ஜோதிடம்: யாரெல்லாம் திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் ஜோதிடம் என்பது மிக முக்கியமாக பார்க்கக்கூடிய விஷயம் ஆகும். குறிப்பாக திருமணம் என்றால் கட்டாயம் நாம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்வது இல்லை. இருப்பினும் ஒருசில இடங்களில் நாம் திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அதை பற்றிப் பார்ப்போம்.
காதல் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் ஜாதக பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அங்கு ஜாதக பொருத்தம் பார்ப்பதால் குழப்பம் ஏற்பட்டு பிரிவை கொடுத்து விடும். ஆதலால் ஜோதிடத்தை நம்பினால் அதன் வழி செல்ல வேண்டும். மன பொருத்தம் ஏற்பட்டு விட்டால் ஜோதிடத்தை பார்க்காமல் இருப்பது நல்லது.
ஒரு சில வீடுகளில் தாய் மாமன் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்கின்றோம் என்று சிறுவயதில் ஒப்பந்தம் போட்டு இருப்பார்கள். அவர்களும் கட்டாயம் திருமண பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ஜோதிடத்தில் பிரசன்னம் பார்க்கும் முறை உள்ளது. அதன் வழியாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று வந்தாலும் நாம் மேற்கொண்டு ஜோதிடம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் பெரியவர்கள் இறக்கும் தருவாயில் கரம் பிடித்து கொடுத்த இடத்திலும் நாம் ஜோதிடம் பார்க்கக்கூடாது.
குலதெய்வம் கோயிலில் பூ போட்டு பார்த்த திருமணம் செய்து கொள்ளலாம் என்று வந்த பிறகும் நாம் பொருத்தம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |