நவராத்திரி அன்று இந்த 7 பொருட்களை தானமாக வழங்கினால் செல்வம் பெருகுமாம்
நவராத்திரி என்பது இந்து மதத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். இது தெய்வ சக்தியின் நவ வடிவங்களை கொண்டாடும் விழாவாகும்.
நவராத்திரி அன்று நன்கொடை அளிப்பது மங்களகரமானதாக கருதப்படுவதோடு நேர்மறை ஆற்றலையும், தேவியின் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது.
அந்தவகையில், இந்த ஆண்டிற்கான சாரதிய நவராத்திர் நேற்று (3 அக்டோபர்) தொடங்கி வரும் அக்டோபர் 12, 2024 அன்று முடிவடைகிறது.
சாரதியா நவராத்திரியின் போது தானம் செய்ய வேண்டிய 7 மங்களகரமான விடயங்களை குறித்து பார்க்கலாம்.
1. உணவு
நவராத்திரியின் போது தேவைப்படுபவர்களுக்கு உணவு தானம் செய்வது அன்னபூர்ணா தேவியின் ஆசீர்வாதங்களை ஈர்க்கிறது.
2. உடைகள்
நவராத்திரியின்போது ஆடைகளை தானம் செய்வதால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற முடியும். இது வீட்டில் நிதி வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது.
3. கல்விப் பொருட்கள்
புத்தகங்கள், எழுதுபொருட்கள் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் போன்ற கல்விப் பொருட்களை நன்கொடையாக அளிப்பது சரஸ்வதி தேவியை மகிழ்விக்கிறது.
4. பணம்
நவராத்திரியின்போது பணத்தை நன்கொடையாக வழங்குவது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தை தருவதோடு வீட்டில் நிதி நிலையை மேம்படுத்துகிறது.
5. நெய் அல்லது எண்ணெய்
நவராத்திரியின் போது நெய் அல்லது எண்ணெய் தானம் செய்வது வீட்டில் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது. மேலும், துர்கா தேவியை மகிழ்விக்கிறது.
6. போர்வைகள் மற்றும் படுக்கைகள்
நவராத்திரியின்போது போர்வைகள் மற்றும் படுக்கைகளை தானம் செய்வது அன்னபூர்ணா தேவியின் ஆசீர்வாதங்களை வழங்குகிறது.
7. வீட்டு உபயோகப் பொருட்கள்
நவராத்திரியின் போது அத்தியாவசிய பாத்திரங்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை தானம் செய்வது லட்சுமி தேவியை மகிழ்வித்து வீட்டில் நிதி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |