அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் தீர எளிய பரிகாரங்கள்
மனிதர்களின் பிறப்பே கற்று தெளிந்து ஞானம் பெற்று கொள்வது தான். அப்படியாக, நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் தீர நாம் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
1. கல்விமேம்பாடு :
தங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க கல்விக்கு அதிபதியான ஸ்ரீ ஹயக்ரீவர் படம் வைத்து அதில் நெய் தீபம் ஏற்றி நைவேத்தியகமாக பால் வைத்து வழிபாடு செய்து ஸ்ரீ ஹயக்கீரிவ ஸ்தோத்திரம் 11 முறை சொல்லவேண்டும். அதோடு, ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ ஹயக்கிரிவருக்கு சாமந்தி பூமாலை சாற்றி வழிபட்டி வந்தால் குழந்தைகளின் விளையாட்டு குணம் விலகி கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
2. தீராத நோய்தீர:
சிலர் அடிக்கடி சந்திக்கும் உடல் உபாதைகள் விலக தினமும் காலை மற்றும் மாலை வேளையில் சிறிது தண்ணீர் அல்லது பால் எடுத்து, தன்வந்தரி படம் முன் வைத்து, நெய் தீபம் ஏற்றி தன்வந்திரி ஸ்லோகம் ஜெபித்த வர தீராத நோய்களும் விலகி செல்லும்.
3. சந்திராஷ்டமம்:
சந்திரன் அவரவர் ராசிக்கு 8- ம் இடம் வரும் காலம் 2 1\4 நாட்கள். இந்த நாட்களை சந்திராஷ்டமம் என்போம். அன்றைய நாளில் முடிந்த அளவு முக்கியமான எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காமல், தேவை இல்லாமல் பிறரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பாடு செலுத்தாமல் இருப்பது நன்மையை கொடுக்கும்.
4. யாத்திரையில் அசுப சகுனம்:
சிலருக்கு பிரயாண காலங்களில் சில அசுப நிகழ்வுகள் நடப்பதை பார்க்கலாம். அதாவது தெரியாமல் கால் வழுக்கி கொள்ளுதல், இடித்து கொள்ளுதல், முக்கியமான பொருட்கள் காணாமல் போகுதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். அவ்வாறு இருக்கும் பொழுது சற்று நேரம் நிதானமாக அமர்ந்து சிறிது தண்ணீர் குடித்துவிட்டு 5 நிமிடம் கழித்து புறப்படலாம். இரண்டாம் முறையும் அதே போன்ற நிகழ்வுகள் ஏற்பாட்டால் அந்த பிராயணத்தைத் தள்ளிப் போடுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
5. கெட்ட கனவுகள்:
சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருவதை பார்க்கமுடியும். அவ்வாறு தொல்லைகளை சந்திப்பவர்கள் ஸ்ரீ ராகவேந்திரர் துதியை கூறி படுத்தால் கெட்ட கனவுகள் வராமல் நல்ல உறக்கம் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |