தந்தையர் தினம் 2025: தந்தையின் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்க நாளை செய்யவேண்டியவை
தந்தை ஒரு மனிதனின் முக்கியமான உறவு ஆகும். அப்படியாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிள்ளைகளுக்காக செய்த தியாகத்தை கொண்டாடுவது தான் இந்நாளின் நோக்கம். வேதங்களில் கடவுளுக்கு முதலானவர்கள் தாய் தந்தை.
அந்த வகையில் ஜோதிடத்தில் சூரியன் தான் தந்தையை குறிக்கும் இடம் ஆகும். இது ஒருவர் ஜாதகத்தில் மிக மிக முக்கியமான இடம் ஆகும். அதனால் இந்த கிரகத்தை நாம் வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய தந்தையின் ஆரோக்கியமும், நமக்கும் தந்தைக்குமான உறவும் பலப்படும் என்று சொல்லப்படுகிறது.
அதோடு ஒருவர் ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருந்தால் அந்த ஜாதகரின் தந்தைக்கும் அவர்களுக்குமான உறவுகளில் சில சிக்கல்கள் ஏற்படும். அதுவே, சூரியனின் நிலை வலுவாக இருந்தால் அவர்கள் இருவருக்கும் இடையே உறவு நன்றாக இருக்கும்.
மேலும், சூரிய பகவானின் அருளைப்பெற கட்டாயம் அந்த ஜாதகர் அவரின் தந்தையை நல்ல மரியாதையோடு நடத்த வேண்டும். தந்தையை மதிக்காத நபருக்கு சூரியனின் அருள் எப்பொழுதும் கிடைப்பது இல்லை.
மேலும், எவர் ஒருவர் ஜாதகத்தில் சூரியனின் நிலை பலவீனமாக இருக்கிறதோ, அவர்கள் அதை வலுப்படுத்த ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குளித்த பிறகு சூரிய பகவானுக்கு தண்ணீர் அர்பணிக்கலாம், அதனுடன் வெள்ளம் தானமாக வழங்கலாம்.
இவ்வாறு செய்ய தந்தையுடன் உங்கள் உறவு சிறப்பாக அமையும். அதோடு, நாளை மிக முக்கியமான தந்தையர் தின நாளில் தந்தைக்கு மஞ்சள் நிற ஆடைகள் அல்லது பொருட்கள் வாங்கி கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாலும் சூரியனின் அருள் கிடைக்கும்.
முடிந்தவர்கள் தந்தையர் தினத்தன்று தந்தைக்கு வெள்ளி அல்லது தங்கத்தில் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். பொதுவாக தங்கம் வெள்ளி வாங்கி கொடுப்பது உறவுகளை பலப்படுத்தும் என்று சொல்கிறது சாஸ்திரங்கள்.
வாழ்க்கையில் நாம் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும் தாய் தந்தையை கடமை தவறாது கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தாலே நம் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |