வாஸ்து: தவறியும் இந்த இடத்தில் வீட்டு மனை வாங்காதீர்கள்.. ஏன் தெரியுமா?
வாஸ்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. வாஸ்து நன்றாக இருந்தால் மட்டுமே நாம் ஒரு இடத்தில் அமைதியான நிலையில் வாழ முடியும். வாஸ்து சரியில்லை என்றால் கட்டாயமாக அங்கு அதீதப் பிரச்சினைகள் காணப்படும்.
அப்படியாக நாம் வாஸ்து ரீதியாக நிறைய விஷயங்கள் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். அதில் முக்கியமாக நாம் வீட்டு மனை வாங்கும் பொழுது சில முக்கியமான வாஸ்து விஷயங்களை நினைவில் வைத்து வாங்கினால் எதிர்காலத்தில் வாஸ்து சிக்கல் வராமல் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

1. நம் ஒரு வீட்டு மனை வாங்கும் பொழுது அந்த மனையை ஒட்டி கோவில் இருந்தால் அந்த மனையை நாம் வாங்க கூடாது. காரணம் கோவில் இருக்கின்ற இடத்தில் நாம் அதே புனிதத்தை கடைபிடிக்க வேண்டும்.
2. நாம் வீட்டு மனை வாங்கும் பொழுது அந்த மனை அகலம் குறைவாகவும் நீளம் அதிகமாகவும் செவ்வக வடிவில் இருக்கக்கூடிய மனையாக இருந்தால் ஒரு சிறந்த பலனை கொடுக்கும்.

3. சதுரமான மனைகள் வாங்கலாம். ஆனால் நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்ட மனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். காரணம் நான்கு பக்கமும் ஒரே அளவு கொண்ட மனைகள் முதலில் கோவில் வாஸ்துமனையாக கருதப்படும். மனிதர்கள் வாழ்வதற்கு செவ்வக மனையே மிகவும் உகந்ததாகும்.
4. அதை போல் மருத்துவமனை கல்லறை அருகே மனைகள் மிகவும் குறைந்த விலைக்கு தருகிறோம் என்று சொன்னாலும் அந்த இடங்களில் மனை வாங்குவதை தவிர்ப்பது நன்மை அளிக்கும். அங்கு நிறைய எதிர்மறை விளைவுகள் நமக்கு கொடுக்ககூடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |