புது வீடு கட்டி குடியேறும் போது பசுவுக்கு ஏன் முக்கியத்துவம்? ஆன்மிக ரகசியம் இதோ
புதிதாக கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தும் போது, பசுவை வீட்டிற்குள் அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ள நிலையில், இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
புதிய வீட்டிற்குள் பசு
பொதுவாக புதிதாக வீடு கட்டி குடியேறுபவர்கள், அந்த வீட்டில் முதன்முதலாக பசுவை அதன் கன்றுடன் அழைத்துவருவது வழக்கமாகும். இவை பாரம்பரிய சடங்கு மட்டுமின்றி ஆன்மிக நம்பிக்கையும் உள்ளதாம்.
புது வீட்டுக்குள் வரும் பசு, அங்கே புல் தின்று, கோமியத்தை (மாட்டு சிறுநீர்) இட வேண்டும். அந்த கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து, புது மனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே புதுமனை புகுவிழாவின் முக்கிய நிகழ்வு.
இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய் நொடியின்றி, செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
கிரகப் பிரவேசம் நடைபெறும் அன்று ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள். அப்படி கோமாதா வருவது, புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்திர பாக்கியத்தையும், நெய் மோட்சத்தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம வளர்ச்சியையும் தரும்.
குறிப்பாக, சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்யம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பசுவும், அதன் வழிவரும் பொருட்களும் நம் கலாச்சாரத்தில் புனிதமாகப் போற்றப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |