குடும்ப பிரச்சனை விலக குங்கும அர்ச்சனை செய்யுங்கள்
குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும்.கணவன் மனைவி என்பவர்கள் இரு வித வெவ்வேறு மனிதர்கள்.
அவர்கள் இருவரும் ஒன்று சேர விதி ஒரு காரணமாக இருந்தாலும்,அதை சரியாக கொண்டு செல்லவது இருவர் கையில் இருக்கிறது. அதாவது கணவன் மனைவி பந்தத்தின் அருமை தெரியவேண்டும்.
அப்பொழுது தான் அந்த பந்தம் சரியான முறையில் அமையும்.இவர் தானே இவள் தானே என்ற அலட்சியம் இருந்தால் கண்டிப்பாக அந்த வாழ்க்கை நல்ல முறையில் அமையாது.
அப்படியாக இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வரத்தொடங்கும்.குடும்பம் நிம்மதி இல்லாமல் இருந்தால் மனதில் நிம்மதி குறைந்து விடும்.
வாழ்க்கை வெறுத்து விடும்.அப்படியாக கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வர தொடங்குகிறது என்றால் அவர்கள் இருவரும் அமைதி காத்து இறை வழிபாட்டில் ஈடுபட பாதி மன அழுத்தம் குறையும்.
இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த உலகில் எல்லாம் சாத்தியம். மேலும் அவர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி பெயரில் குங்கும அர்ச்சனை செய்யும்பொழுது இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். ”ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ”.
மேலும் கணவன் மனைவி இடையே அன்பு படம் அதிகரிக்க ”ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ”இந்த மந்திரத்தை மூன்று கூறினால் போதும்.எல்லாம் மாறிவிடும்.
அதாவது ஒருவர் மீது அன்பு செலுத்த நம் மனம் முதலில் அன்பால் நிறைந்திருக்க வேண்டும்.அப்பொழுது தான் நாம் பிறரிடம் அன்பு செலுத்த முடியும்.
மனதில் கோபம் வன்மம் நிறைந்து இருந்தால் பிறரிடம் நாம் பழகுவது கடினமாக இருக்கும்.ஆகையால் கணவன் மனைவி மீது எத்தனை பெரிய கோபம் இருந்தாலும் அதை சமாதானம் செய்து வாழ வாழ்கை சந்தோஷமாக இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |