வைகாசி விசாகம் 2025: இந்த விசாகத்தில் விரதம் இருந்தால் அடுத்த விசாகத்தில் கெட்டி மேளம்
முருகப்பெருமான் அவதரித்த தினம் தான் வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது. அப்படியாக, முருகன் அவதரித்த திருநாள் உலகம் எங்கிலும் இருக்கும் முருகன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைப்பெறும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த வைகாசி விசாக நாளன்று பலரும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலக முருகவழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
அதிலும் குறிப்பாக நீண்ட நாட்களாக திருமண வரன் அமையாதவர்கள், நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று முருகப்பெருமானை மனம் உருகி வழிபாடு செய்து விரதம் மேற்கொள்வார்கள்.
அப்படியாக, உண்மையில் இந்த நாள் அன்று வழிபாடு செய்வது அவ்வளவு விஷேசம் கொண்டதா? அன்றைய தினம் பக்தர்கள் எவ்வாறு விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று வைகாசி விசாகம் பற்றிய பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல வாஸ்து நிபுணர் பாரதி ஸ்ரீதர் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |