ஜோதிடம்: மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 08, 2025 11:24 AM GMT
Report

மனிதர்களுக்கு பயம் என்பது இயல்பான விஷயம் என்றாலும் சிலர் எதற்கும் பயந்து கொண்டே இருப்பார்கள். அப்படியாக, ஜோதிட ரீதியாக மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ராசிகள் யார் என்று பார்ப்போம்.

புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சூரியன் ராகு இணைவு- உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் சூரியன் ராகு இணைவு- உங்கள் ஜாதகத்தில் உள்ளதா?

கடகம்:

கடக ராசிக்காரர்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்கள் என்றாலும், அவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் சமயங்களில் அவர்கள் உறவுகள் பிரிந்து விடுவார்களோ என்று மிகுந்த அச்சத்தோடு வாழ்வார்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் எதையும் சரியாக தீர ஆலோசித்து செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். அதனால் தான் செய்யும் விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டு விடுமோ என்று தேவை இல்லாத பயம் கொள்வார்கள்.

விருச்சிகம்:

இவர்கள் ஒரு உறவில் அன்பு செலுத்த மிகவும் பயம் கொள்வார்கள். காரணம் தங்கள் அன்பை வைத்து உறவுகள் ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் இருக்கும். அன்பு தான் விருச்சிக ராசியின் பலவீனம்.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் எதிலும் தோல்வி அடையக்கூடாது என்று பயம் கொள்வார்கள். அதனால் அவர்கள் எந்த ஒரு முயற்சிகள் செய்தாலும் தங்கள் பின்விளைவு என்னவாக இருக்கும் என்று மிகுந்த பதட்டத்துடன் வேலை செய்வார்கள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US