ஆடி மாதத்தில் ஒவ்வொரு ராசியினரும் வழிபடவேண்டிய தெய்வங்களும் முக்கியமான நாட்களும்

By Sakthi Raj Jul 18, 2024 01:00 PM GMT
Report

மேஷம்

செவ்வாய்கிழமையில் முருகன் வழிபாடும், வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடும் பொருளாதார உயர்வை தரும்.

ரிஷபம்

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி ஆலயத்திற்கு வணங்கி வெள்ளை நிற வஸ்திரம் வழங்கி மற்றும் தாமரை பூக்களால் அர்ச்சனை செய்து வருவது மேன்மையைத் தரும்.

மிதுனம்

விஷ்ணு கோவிலுக்கு சென்று விஷ்ணு பகவானை தரிசித்து துளசி மாலை சாற்றலாம்.

கடகம்

சனிபகவான், ஆஞ்சநேயர் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் தடங்கல்கள் விலகி மேன்மை உண்டாகும்.

கன்னி

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி கோவிலில் வழிபாடு செய்வது குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

ஆடி மாதத்தில் மறக்ககூடாத முக்கியமான நாட்கள்

ஆடி மாதத்தில் மறக்ககூடாத முக்கியமான நாட்கள்


துலாம்

சிவபெருமான் மற்றும் அம்பிகை வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் குடும்பம் மற்றும் தொழிலில் இருக்கும் தடைகள் நீங்கி விருத்தி அடையும்.

விருச்சிகம்

முருகன் மற்றும் சனி பகவான் வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வது வாழ்வில் முன்னேற்றங்கள் அடைய உதவும்

தனுசு

குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, அர்ச்சனை செய்து வரலாம்.

மகரம்

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வழபட்டு வரலாம்.

கும்பம்

சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளு எண்ணெய் தீபம் ஏற்றி வழபட்டு வரலாம்.

மீனம்

செவ்வாய் மற்றும் வெள்ளியன்று துர்க்கை வழிபாடும், வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடும், இன்னல்களை தீர்க்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US