காலத்தால் முடியாததையும் நடத்தி காட்டும் கால பைரவர் வழிபாடு

By Sakthi Raj Jun 27, 2025 05:31 AM GMT
Report

 நாம் நினைத்ததை நடத்தி காட்டும் வல்லமை தரக்கூடியவர் பைரவர். ஆனால், பைரவர் வழிபாட்டின் அருமை பலருக்கும் தெரிவதில்லை. அதாவது, காலத்தின் தெய்வமாகவும், ஆலயங்களில் காவல் தெய்வங்களாகவும், சிவபெருமானின் ஒரு அம்சமாகவும் இருக்கக்கூடியவர் கால பைரவர். இவரை வழிபாடு செய்து பலன் காணாதவர்கள் எவரும் இருக்க முடியாது.

அப்படியாக, பைரவரை வழிபாடு செய்ய உகந்த நாளாக அஷ்டமி திதி உள்ளது. அன்றைய நாளில் காலபைரவருக்கு செவ்வரளி மலர்கள் சூட்டி, வடை மலை சாற்றி தயிர் சாதம் படைத்து நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். பிறகு பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி பைரவர் அஷ்டகத்தை படிக்க வேண்டும்.

காலத்தால் முடியாததையும் நடத்தி காட்டும் கால பைரவர் வழிபாடு | Kaala Bairavar Worship In Tamil

இந்த வழிபாட்டை ராகு காலத்தில் செய்தால் மிக சிறந்த பலன் கொடுக்கும். இவ்வாறு இந்த வழிபாட்டினை 21 அஷ்டமிகளில் விரதம் இருந்து செய்து வந்தால் மனதில் உள்ள பயம் விலகும். அதை விட நம்மை பற்றி நாம் நினைத்து இருக்கும் தாழ்வுமனப்பான்மை விலகி தைரியம் பிறக்கும்.

1000 ஆண்டுகள் பழமையான திருமுருகன்பூண்டி முருகன் கோயில்

1000 ஆண்டுகள் பழமையான திருமுருகன்பூண்டி முருகன் கோயில்

மிக முக்கியமாக பைரவர் அஷ்டகம் படிக்கும் பொழுது மனதில் என்ன நினைத்துப் படிகின்றமோ அவை கட்டாயம் நடந்தே தீரும். ஆதலால் நாம் அதை படிக்கும் பொழுது நம் எண்ண அலைகளை கவனமாக வைத்து கொள்வது நல்லது.

காலத்தால் முடியாததையும் நடத்தி காட்டும் கால பைரவர் வழிபாடு | Kaala Bairavar Worship In Tamil

மேலும், நாம் பைரவர் வழிபாடும் செய்யும் பொழுது நம்மை சூழ்ந்த பில்லி சூனியம் ஏவல் போன்ற விஷயங்கள் நம்மை நெருங்குவது இல்லை. அதோடு, பைரவர் வழிபாடு செய்யும் பொழுது சிவப்பு நிற ஆடையை அணிந்து செய்வது நமக்கு கூடுதல் பலன் அளிக்கும்.

இந்த வழிபாட்டை அஷ்டமி திதி மட்டும் அல்லாமல் ஆயில்யம், ஸ்வாதி, மிருகசீரிஷம் நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வழிபாடு செய்யலாம். அவ்வாறு செய்யும் பொழுது நமக்கு பைரவரின் அருளால் துன்பம் விலகி வெற்றியை தருவார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US