12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குபேர யோகம் யாருக்கு தெரியுமா?

By Sakthi Raj Jul 03, 2024 06:30 AM GMT
Report

 ரிஷிப ராசியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் குபேர யோகத்தால் அதிர்ஷத்தில் நனைய போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.

குபேர யோகம் எப்பொழுது உருவாகிறது என்றால்,ஜாதகத்தின் இரண்டாவது மற்றும் பதினொன்றாவது ராசியின் அதிபதி குரு பகவான், தனது சொந்த ராசியான ரிஷபத்தில் உயர் ஸ்தானத்தில் இருக்கும்போது, பரஸ்பர ராசி மாற்றத்தால், ‘குபேர யோகம்’ உண்டாகிறது.

ஜோதிடத்தில், ’குபேர யோகம்’ என்பது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. இந்த குபேர யோகத்தின் மூலம், ஒரு நபர் சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் நல்ல அந்தஸ்து பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒருவர் ஜாதகத்தில் குபேர யோகம் இருந்தால் அவர்களது வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லப்படுகிறது. அப்படியாக 12 வருடம் பிறகு ரிஷப ராசியில் உருவாகும் குபேர யோகத்தால் மூன்று ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்க போகிறது.அவர்கள் எந்த ராசி என்று பார்ப்போம்.

12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் குபேர யோகம் யாருக்கு தெரியுமா? | Kubera Yogam 12 Raasigal Athirstham Raja Yogam

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் குபேர ராஜயோகத்தால் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் திருப்பங்களையும் பெறப்போகிறார்கள். புதிய வருமானம் கைக்கு வரும்.நீண்ட நாள் பணப்பிரச்சனை விலகும்.தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நிலையில் இருந்த பிரச்சனைகளை சரியாகும். தொழில் செய்பவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.நிலையான பொருளாதாரம் உருவாகும். மகாலக்ஷ்மியின் அருளால், செல்வம் மற்றும் தானியங்கள் நல்ல வரவில் கிடைக்கும்.

சின்ன திருச்செந்தூர் என்று அழைக்கப்படும் முருகன் எங்கு இருக்கிறார் தெரியுமா?

சின்ன திருச்செந்தூர் என்று அழைக்கப்படும் முருகன் எங்கு இருக்கிறார் தெரியுமா?


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.அதனால் வாழ்க்கையில் இத்தனை நாள் எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடக்கும். வெளிநாட்டுப் பயணம் கைகூடும். மாணவர்களுக்கு இது நல்ல காலம்.கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் கேட்ட நேரத்தை பொற்காலமாக மற்றும் இந்த குபேர யோகம். குபேர யோகத்தால் பல நாள் நெருக்கடிகள் சீராகும்.வீட்டில் செல்வம் பெருகும்.போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு நல்ல காலம் இது.திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியில் நிலவும்.நீண்ட நாள் வாழ்க்கையில் இருந்த பண கஷ்டங்கள் மன கஷ்டங்கள் கஷ்டங்கள் தீரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US