சனியின் தாக்கம் குறைய வருடம் ஒருமுறை குலதெய்வம் கோயிலில் செய்ய வேண்டிய பரிகாரம்
குலதெய்வம் நம்முடைய குலம் காக்கும் தெய்வம் ஆகும். வாழ்க்கையில் உள்ள தடைகளும் தடங்களும் விலக கட்டாயம் எல்லோருக்கும் குலதெய்வத்தின் அருள் தேவை. அப்படியாக, அடிக்கடி தங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யமுடியாதவர்கள் வருடம் ஒருமுறை இந்த பரிகாரங்கள் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி நன்மை கிடைக்கும் என்கிறார்கள்.
காலம் காலமாக குலதெய்வத்தின் அருளை பெற நாம் குலதெய்வம் கோயிலுக்கு சென்று சக்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்வதுண்டு. இவ்வாறு, நாம் குலதெய்வம் கோயிலில் சக்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்வதற்கு பின்னால் சில முக்கிய சிறப்பம்சங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
மனித வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்ப்பு கொண்டது ஜோதிடம். இந்த ஜோதிடத்தில் 5ஆம் இடம் மிக மிக முக்கியமான அமைப்பு ஆகும். இந்த ஐந்தாம் இடம் தான் ஒருவர் வாழ்க்கைக்கு உரிய புத்திர பாக்கியம், அறிவுத்திறன், கல்வித்திறன் போன்றவற்றை தீர்மானிக்கிறது.
மேலும், இந்த ஐந்தாம் இடத்தில் தீர்க்கமாக சம்மணம் போட்டு உள்ளவர் சனி பகவான். அதே இடத்தில் தான் குலதெய்வம் இருக்கிறது. இந்த ஐந்தாம் இடத்தில் உள்ள சனிபகவான் நீதிக்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்.
இந்த உலகில் நாம் மனிதர்களை ஏமாற்றி விட்டோம் என்று நினைத்து கொள்ளலாம், ஆனால் கட்டாயம் சனி பகவானை ஒரு பொழுதும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு சனி பகவான் கொடுக்கும் துன்பத்தில் இருந்து விடுபட கட்டாயம் நமக்கு குலதெய்வத்தின் அருள் அவசியம்.
மேலும், அறுசுவைகளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய சுவை ஒன்று உண்டு. அந்த வகையில் சனிபகவானுக்கு உரிய சுவை கசப்பு. இந்த கசப்பிற்கு எதிராக இருக்கக்கூடிய சுவை தான் இனிப்பு.
அதனால் தான் குலதெய்வத்திற்கு வருடா வருடம் சர்க்கரை பொங்கல் படைத்து வழிபாடு செய்து வந்தால் சனி பகவானால் உண்டான தாக்கம் குறைந்து கர்ம வினைகள் விலகுகிறது என்கிறார்கள்.
ஆக, எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி மறக்காமல் வருடம் ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் நம் குடும்பம் குலதெய்வத்தின் அருளால் நிச்சயம் மேன்மை அடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |