பிறந்த குழந்தைக்கு எப்பொழுது ஜாதகம் பார்க்கலாம்?
நம் அன்றாட வாழ்க்கையில் என்னதான் நாமே சுயமாக யோசித்து செயல் பட்டாலும் கால மாற்றம் கிரகநிலைகளாலும் நாம் கண்டிப்பாக ஜாதகம் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பது, திருமணம் சடங்கு என அனைத்துக்கும் நாம் ஜாதகம் பார்த்து நல்ல நேரம் பார்த்து , இந்த கால கட்டத்தில் நினைத்த காரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா? கிரகநிலைகள் நமக்கு சாதகமாக இருக்கிறதா என்றெல்லாம் நாம் யோசித்து முடிவு செய்வோம்.
மேலும் ஜாதகம் பார்த்து நம்முடைய எதிர்கால பலன்கள் பற்றி தெரிந்து கொள்வதும் உண்டு. ஜாதகம் வைத்து ஒருவர் குணாதிசியங்கள் நாம் அறிந்து கொள்ளலாம் .
அப்படி வீட்டில் புது மழலைகளுக்கு எப்பொழுது ஜாதகம் கணிக்கலாம் என்ற கேள்விகள் இருக்கும்.
அதை பற்றி பார்க்கலாம்.
கருட புராணம் படி ஒரு குழந்தை பிறந்து ஐந்து வயது வரை அவர்கள் முன் ஜென்ம நினைவு இருப்பதால் அந்த குழந்தை பெற்றோர்க்கு சொந்தம் இல்லை என்கின்றனர்.
அதன் படி பார்த்தால் ஒரு குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் பிறகே ஜாதகம் எழுத வேண்டும் என்று தெரிகிறது.
ஆனால் ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் எழுத வேண்டும் எனவும் அதற்கு முன் ஜாதகத்தை எழுத அவசரம் அடையவேண்டாம் எனவும் கூறுகின்றனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |