தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ராஜகோபால சுவாமி

By Sakthi Raj Jul 02, 2024 08:00 AM GMT
Report

 யாரும் சென்று பிரச்சனையோ துன்பங்களோ தேடி கொள்வதில்லை.அது மனிதரின் ஆசையும் இல்லை.என்னதான் சாதூரியமாக செயல்பட்டாலும் நேரம் சரி இல்லை என்றால் துன்பம் கட்டாயம் நம்மை வந்து அடையும்.

கிரகநிலை என்னதான் நமக்கு சாதகமா இல்லை என்றாலும் அதற்கான பலனை குறைக்க நாம் இறைவழிபாடு செய்ய அதில் இருந்து மீளலாம்.

அப்படியாக இவர் முன் நின்று தன்னுடைய துயர் சொல்ல அதை நொடி பொழுதில் தீர்த்து கொடுக்கிறார்.அவரை பற்றி பார்ப்போம்.

தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ராஜகோபால சுவாமி | Kumbakonam Rajagopala Swamy Mannarkudi Alayam

கும்பகோணம் என்றாலே அங்கு அனைத்துக்கும் தீர்வு உண்டு.அங்கு எல்லாம் கோயில்களும் அற்புதமான மனிதர்களின் வாழ்க்கைக்கு அனைத்து தீர்வும் கொடுக்க கூடிய திருத்தலமாக அமைந்திருக்கும்.

இங்கு தான் நாம் தேடி வந்த நொடி பொழுதில் துயர் தீர்க்க கூடிய இறைவன் ராஜகோபால சுவாமி வீற்றி இருக்கிறார்.

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்

27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்


மிக பெரிய கோயில் இல்லை என்றாலும் மிக பெரிய மாற்றங்களையும் பலனையம் கொடுக்க கூடிய கோயில்.

இங்கு உள்ள இறைவன் திருநாமம் ராஜகோபாலன் தாயார் செங்கமலவல்லி. அமைதியாகவும், கருணையுடன் பொங்குவது போலவும் உருவச் சிலைகள் அமைந்துள்ளன.

தீராத பிரச்சனைகளை தீர்க்கும் ராஜகோபால சுவாமி | Kumbakonam Rajagopala Swamy Mannarkudi Alayam

அதாவது பாவங்கள் செய்யவில்லை இருந்தாலும் மன கவலை,பிறரால் பிரச்சனை என்று துன்புறும் இதயங்கள் கட்டாயமாக இந்த ராஜகோபால சுவாமியை தரிசனம் செய்ய அனைத்து கவலைகளில் இருந்து ,மீண்டு விடலாம் என்பது நம்பிக்கை.

இன்னும் சொல்லப் போனால் மன்னார்குடி ராஜகோபால பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அத்தனையும் இந்த கும்பகோணம் ராஜகோபால சுவாமிக்கும் உண்டு.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US