குழந்தை பாக்கியம் பெற பால் அபிஷேகம் செய்தால் போதும்...!

By Kirthiga Jun 07, 2024 06:22 AM GMT
Report

திருவள்ளுர் மாவட்டம் ஆண்டார் குப்பம் என்ற பகுதியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இதற்கான ஒரு வழிபாட்டு முறையும் காணப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் வரும் இரவு அன்று பெண்கள் ஆண்டார் குப்பம் கோயிலில் பெண்கள் தங்கி வழிப்பட வேண்டும்.

குழந்தை பாக்கியம் பெற பால் அபிஷேகம் செய்தால் போதும்...! | Kuzhanthai Baakkiyam Balasubramanya Swamy Temple

மறுநாள் காலையில் குளித்து, முருக்கும் நடைபெறும் பால் அபிஷேகத்தில் கலந்துக்கொள்ள வேண்டும்.

மூன்று கிருத்திகை நாட்களில் இவ்வாறு பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டாகும் என்பது ஐதீகம்.

கோவிலில் தலவிருட்சத்தில் குழந்தை பாக்கியம் வேண்டும் என பிராத்தனை செய்பவர்கள் தொட்டில் கட்டலாம்.

இக்கோயிலில் நூற்றுக்காண தொட்டில்கள் காணப்படுவதாகவும் இதனால் பலரும் பலன் அடைந்துள்ளதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US