மரணமே நெருங்கினாலும் இதை மட்டும் செய்யாதீர்கள்

By Sakthi Raj Jun 22, 2025 10:49 AM GMT
Report

மனிதர்கள் வாழும் அந்த குறைந்த நாட்களில் அவன் சந்திக்காத துன்பங்களே இல்லை. அப்படியாக, எவ்வளவு துன்பங்களை சந்தித்தாலும் ஏன் மரணமே நெருங்கினாலும் நாம் மனம் கலங்காமல் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்.

அதாவது நாம் இறந்த பிறகு நமக்கு நடக்க போவதை நாம் நினைவில் கொண்டால் கட்டாயம் நாம் எதற்கும் மன சஞ்சலம் அடையமாட்டோம். நாம் இறந்து விட்டால், கட்டாயம் நம்மை சுற்றி உள்ள உற்றார் உறவினர்கள் நமக்கு செய்யவேண்டிய கடமைகளை அவர்கள் செய்து விடுவார்கள்.

மரணமே நெருங்கினாலும் இதை மட்டும் செய்யாதீர்கள் | Life Philosophy And Spiritual Thoughts In Tamil

நம் ஆடைகளை அகற்றி நம்மை குளிக்க வைத்து, புது துணிகளை அணிவிப்பார்கள். நாம் குடி இருந்த வீட்டை விட்டு நம் உடலை தகனம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்து செல்வார்கள். அந்த நேரத்தில் நம் உடலை சரியான முறையில் எரிப்பதிலும், புதைப்பதிலும் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்: பக்தி, வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் சங்கமம்

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி திருக்கோவில்: பக்தி, வரலாறு மற்றும் கட்டிடக்கலையின் சங்கமம்

நமக்காக சேர்த்து வைத்த பொருட்கள் எல்லாம் நம்மை விட்டு பிரிக்கப்படும். அதை விட நாம் பார்த்து பார்த்து பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் வெளியே செல்லும், கண்டுகொள்ளப்படாது.

நம்முடைய பிரிவால் யாரும் மாண்டு போகமாட்டார்கள், அவர்கள் சிரிப்பதையும், சிந்திப்பதையும் நிறுத்தமாட்டார்கள், அவர்களுக்கான வாழ்க்கையை வாழ்வதில் எந்த ஒரு தடைகளும் தடங்கலும் இருக்காது. ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை மறந்து விடுவார்கள்.

மரணமே நெருங்கினாலும் இதை மட்டும் செய்யாதீர்கள் | Life Philosophy And Spiritual Thoughts In Tamil

நம்மிடம் ஏதேனும் சொத்துக்கள் இருந்தால் அதை உடன் இருப்பவர்கள் எடுத்து கொள்வார்கள், நாம் பார்க்கும் வேலை வேறொருவருக்கு சென்று விடும். இதை எல்லாம் விட நம்மை கேட்காமல் எப்படி பெயரை வைத்தார்களோ, அதே போல் நம்மை கேட்காமல் நாம் இறந்த உடன் நம்முடைய பெயரும் போயிவிடும்.

நம் பெயரை சொல்லி அடுத்து அழைக்க மாட்டார்கள். பாடியை எப்பொழுது எடுப்பார்கள் என்று பெயர் மாற்றப்படும். ஆக, இவ்வளவு எளிதாக ஒரு மனிதனின் வாழ்கை முடிந்துப்போகும் நிலையில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.

அதனால், போட்டி பொறாமைகள் என்று அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்வதை காட்டிலும், மனதில் நல்ல சிந்தனையும், இறைநம்பிக்கையும் கொண்டு வாழ்ந்து வந்தால் இறந்த பிறகு மோட்சமும் மீண்டும் ஒரு பிறவி எடுத்தால் அதில் நல்ல வாழ்வும் கிடைக்க இறைவன் அருள் புரிவார்.       

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US