12 ராசிகளுக்கு உரிய சிவ வழிபாட்டு ரகசியம்.. சொல்லப்படாத சூட்சும வழிமுறைகள்
ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்துவமான குணம் இருக்கிறது. அதாவது அந்த ராசியின் அதிபதி பொறுத்துதான் ஒவ்வொருவருடைய மனநிலை மாறுபடும். அப்படியாக, கர்ம வினைகளை அடியோடு அழித்து பாவங்களைப் போக்கக்கூடிய இறைவனாக சிவபெருமான் இருக்கிறார்.
அவரை நாம் சரண் அடைந்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய பாவங்களைப் போக்கி முக்தி அருளுகிறார். அப்படியாக, பன்னிரண்டு ராசிகளும் அவர்கள் வாழ்க்கையில் உள்ள தடை விலக செய்ய வேண்டிய சிவ வழிபாடுகளையும் அபிஷேகங்களையும் பற்றி பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது அதிகமாக கோபம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆதலால் இவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக சிவபெருமானுக்கு பால் மற்றும் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன்களை பெறலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் அவர்களுடைய பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை பெற தயிர் மற்றும் தேன் அபிஷேகம் செய்யலாம். இதனை இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று வருகின்ற பிரதோஷ நேரத்தில் செய்வது சிறப்பு பலனை கொடுக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் மனக்குழப்பம் விலகி தெளிவு பெற பன்னீர் அபிஷேகம் செய்யலாம். இவர்கள் புதன்கிழமை அமாவாசைக்கு அடுத்து வருகின்ற நாளில் செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் மனதில் உள்ள பயம் மற்றும் உறவுகள் இடையே சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் விலக திங்கட்கிழமை மாலை நேரத்தில் பால் மற்றும் வெள்ளை மலர்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் அவர்களுடைய அதிகாரத்தடை விலக தேன் அபிஷேகம் செய்வது பலன் கொடுக்கும். இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அபிஷேகம் செய்வதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுகிறார்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் அவர்களுடைய ஆரோக்கிய குறைபாடு மற்றும் கவலைகள் விலக விபூதி கலந்த நீர் அபிஷேகத்தை புதன்கிழமை காலையில் செய்ய நல்ல மாற்றத்தை பெறலாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் ஒற்றுமையை பெற பன்னீர் மற்றும் ரோஜா அபிஷேகத்தை வெள்ளிக்கிழமை பிரதோஷ நாட்களில் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இவர்களுக்கு இருக்க கூடிய மறைமுக எதிரிகள் தொல்லையிலிருந்து விலக இவர்கள் கருப்பு எள் கலந்த நீர் அபிஷேகத்தை செவ்வாய் அல்லது சனிக்கிழமை இரவு நேரங்களில் செய்வது நல்ல மாற்றம் கொடுக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகள் விலக மஞ்சள் கலந்த பால் அபிஷேகம் வியாழக்கிழமை காலை அன்று செய்யும் பொழுது தடைகள் யாவும் விலகும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் கடன் மற்றும் வேலை சுமை குறைய இவர்கள் எள் எண்ணெய் அபிஷேகத்தை சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.
கும்பம்:
எதிர்பாராத முன்னேற்றம் கிடைப்பதற்கு இவர்கள் சனிக்கிழமை மாலை நேரத்தில் பன்னீர் அபிஷேகம் செய்வது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் அடையவும் வேலையில் உள்ள தடைகள் நீங்கவும் வியாழக்கிழமை அல்லது திங்கட்கிழமை விபூதி அபிஷேகம் செய்தால் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |