11 நாட்களில் எதிரிகள் தொல்லை விலக செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த பரிகாரம்
மனிதனாக பிறந்தால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் நேரம் சரி இல்லாமல் போனால் எதிரிகள் தொல்லை, பில்லி சூனியம் ஏவல் போன்ற விஷயங்களுக்கு கூட நாம் எளிதாக பாதிக்கப்பட்டு விடுவோம்.
அப்படியாக, கால சூழ்நிலையால் எதிரிகள் வசம் சிக்கி தவிப்பவர்கள் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த வழிபாடும் அதற்கு உரிய பரிகாரங்கள் பற்றியும் பார்ப்போம். நம் மனதை உடைத்து, நம்மை முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இறைவன் மட்டுமே சரியான பதில் கொடுக்க முடியும்.
இவ்வாறான இருள் சூழ்ந்த நிலையில் நம்மை மீட்டு கொண்டு வருபவள் தான் மகா பத்ரகாளியம்மன். அவளை சரண் அடைந்தால் வேகம் குறையாது அவள் சக்தியால் எதிரிகளை உங்களை விட்டு விலக செய்வாள்.
அப்படியாக, இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று அல்லது ஞாயிற்று கிழமை அன்று துவங்கலாம். ஆனால், வழிப்பாட்டை தொடங்கிய அடுத்த 11 நாட்களுக்கு அந்த வழிப்பாட்டை விடாமல் செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு செம்பருத்திப்பூ சிவப்பு நிற அடுக்குச் செம்பருத்தி பூக்களை வாங்கி உங்கள் கையாலேயே மாலை கோர்க்க வேண்டும். மாலையை 11, 21, 51 என்ற எண்ணிக்கையில் கட்டினாலும் சரி அல்லது நம் வசதிக்கு ஏற்ப கட்டிக்கொள்ளலாம்.
பிறகு அந்த மாலையை கொண்டு மகாபத்ரகாளி கோவிலில் கொடுத்து, அம்பாளுக்கு சாத்தி நமக்கு ஏற்பட்ட துன்பங்களும் எதிரிகளால் நாம் படும் கஷ்டங்களும் விலக வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.
பிறகு அம்பாளுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வைத்து அம்பாளை 11 முறை வலம் வந்து வழிபாடு செய்யவேண்டும். அவ்வாறு தொடர்ந்து 11 நாட்கள் செய்து வந்தால் அம்மனின் அருளால் எதிரிகள் இடம் தெரியாமல் ஓடி விடுவார்கள்.
மேலும், வீட்டின் அருகில் மகாபத்ர காளி கோவில் இல்லை என்றால் காளி கோவிலில் செய்தாலும் முழு பலன் கிடைக்கும். இந்த வழிபாட்டை மனம் உருகி செய்யுங்கள் உங்கள் பக்கம் உண்மை இருக்க அம்மா உங்களுக்காக குரல் கொடுக்க வருவாள். உங்கள் வீடுகளிலும் வசந்தம் பொங்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |