அம்மை வெப்ப நோய் நீங்க நாம் சொல்லவேண்டிய மந்திரம்

By Sakthi Raj Apr 09, 2024 05:40 AM GMT
Report

வெயில் காலம் பிறந்து விட்டது. இந்த வெயில் தாக்கத்தினால் பலருக்கும் பல நோய்கள் வரகூடலாம்.

அப்படியாக வெயில் காலத்தில் மிகவும் பரவலாக வரக்கூடிய அம்மை ஜுரம் போன்ற நோய்களுக்கு நாம் திரு ஆலுவாய் எனப்படும் மதுரை சோமசுந்தர கடவுள் மற்றும் மீனாட்சி அம்மையை தியானித்து ஞானி சம்பந்த பெருமான் மந்திரம் ஆவது நீறு என்னும் பதிகத்தை ஓதிட நம்முடைய நோய்கள் குணமாகும்.

அம்மை வெப்ப நோய் நீங்க நாம் சொல்லவேண்டிய மந்திரம் | Manthiram Sivan Meenatchiamman  

இப்பதிகம், பிறந்த காரணம் பற்றி பார்ப்போம்.

திருஞானசம்பந்தர் ஒருமுறை மதுரையில் ஓர் மடத்தில் அடியார்களுடன் தங்கி இருக்கின்றார்.

இதையறிந்த சமணர்கள் அம்மடத்திற்கு தீ வைத்துள்ளார்கள். அப்பொழுது சம்பந்தர் "அத்தீயை சென்று பாண்டியருக்கு ஆகுக" என்று சம்மந்தர் ஆணையிட, அதனால் கூன் பாண்டியன் தீராத வெப்பநோயால் வருந்தினார்.

அம்மை வெப்ப நோய் நீங்க நாம் சொல்லவேண்டிய மந்திரம் | Manthiram Sivan Meenatchiamman

அந்நோயை தீர்க்க எவ்வளவு முயன்றும் சமணர்களால் முடியவில்லை. பின்னர் சம்பந்த பெருமான் இப்பதிகத்தை ஓதி திருநீர் அளிக்க பாண்டிய மன்னனும் நோய் நீங்கி பேரின்பம் பெற்றார் 

அம்மை வெப்ப நோய் நீங்க நாம் சொல்லவேண்டிய மந்திரம் | Manthiram Sivan Meenatchiamman

மேலும் சிவ பூஜை செய்யும் நண்பர்கள் திருநீறு உடம்பில் அணியும் பொழுது இப்பதிகத்தை ஓதியே செய்ய வேண்டும்.

அப்படி செய்ய எல்லாவிதமான நோய்க்கும் தீங்கிற்கும் இந்த பதிகத்தை ஓதி திருநீர் அணிந்தால் அதற்கான பயன்கிடைக்கும்   .

மேலும் பயம் தீய கனவுகள், உடல் நலகுறைவு   போன்ற எல்லாவற்றுக்கும் இப்பதிகம் நல்ல பலனை தருகின்றது . ஆதலால் நாமும் இப்பதிகத்தை ஓதி நல்ல பலன் பெறுவோம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே....
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US