இன்றைய ராசி பலன்(28-05-2025)
மேஷம்:
இன்று உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றி மறையும். எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்வது நன்மை வழங்கும். நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும். உணவு விஷயங்களில் கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று உங்கள் அணுகுமுறையால் வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைகளை மிக காவனமாகவும் எச்சரிக்கையாகவும் செய்ய வேண்டும். மகிழ்ச்சியான நாள்.
மிதுனம்:
மாலை வரை எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனம் பதட்டத்துடன் காணப்படும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடையும் தாமதமும் உண்டாகும். பேச்சுக்களில் கவனம் தேவை.
கடகம்:
உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும்.
சிம்மம்:
உங்கள் முயற்சி பலன் தரும். வருமானத்திற்காக திட்டமிடுவீர். பிரபலங்களை சந்திப்பீர். செல்வாக்கு உயரும். மனதில் தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும்.
கன்னி:
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை நடைப்பெறும். பிரிந்த சென்ற உறவுகள் உங்களை மீண்டும் தேடி வரும். எதிலும் சற்று கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும்.
துலாம்:
மாலை வரை சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கவனம் அவசியம். புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றியை கொடுக்கும். செயல்களில் நிதானம் தேவை. பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
நண்பர்கள் உதவியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
தனுசு:
இன்று குடும்பத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு பிள்ளைகள் உடல் நிலையில் சில சங்கடங்களை சந்திப்பார்கள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
மகரம்:
உங்கள் திறமை வெளிப்படும். தடைப்பட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை மாலைக்குள் முடிவிற்கு வரும்.
கும்பம்:
இழுபறியாக இருந்த வேலை நிறைவு பெறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். நினைத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.
மீனம்:
பிரச்சனைகள் எல்லாம் விலகி செல்லும். சிலருக்கு எதிர்பாரத மாற்றங்களும் திருப்பங்களும் உண்டாகும். உடலில் சோர்வு உண்டாகும். வருமானத்தில் சந்தித்த தடைகள் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |