இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் அரசனைப் போல் மிகவும் கம்பீரமாக இருப்பார்களாம்

By Sakthi Raj Aug 15, 2025 12:10 PM GMT
Report

 ஜோதிடத்தில் ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட இந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் கம்பீரமாகவும் ஆளுமை குணம் படைத்தவராகவும் இருப்பார்களாம்.

அதோடு, இவர்களுக்கு ஒரு அரசனுக்கு இருக்கும் குணங்கள் அனைத்தும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியாக எந்த 3 மாதத்தில் பிறந்த ஆண்கள் அரசனை போல் வாழ்வார்கள் என்று பாப்போம்.

2025 கிருஷ்ணர் ஜெயந்தி: ஏன் வீடுகளில் கிருஷ்ணரின் பாதம் வரைய வேண்டும்?

2025 கிருஷ்ணர் ஜெயந்தி: ஏன் வீடுகளில் கிருஷ்ணரின் பாதம் வரைய வேண்டும்?

 

ஜனவரி:

இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள். முடிவு எடுப்பதில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். இவர்களால் பிறருக்கு தீமை நடக்காமல் இருக்க பெரும் முயற்ச்சி எடுப்பார்கள். ஆனால் யாரேனும் உதவி என்று கேட்டு சென்றால் அவர்களுக்கு கட்டாயம் இவர்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள். இவர்கள் வேலை என்று எடுத்துக்கொண்டால் தலைமைத்துவ இடத்தில் இருப்பவர்கள். இவர்கள் இரு அரசனை போல் குடும்பத்தையும் அவர்களை நம்பியவர்களையும் பாதுகாக்க கூடியவர்கள்.

ஏப்ரல்:

இந்த மாதத்தில் பிறந்த ஆண்களின் தோற்றம் மிகவும் கம்பீரகமாக இருக்கும். இவர்களுக்கு சமுதாயத்தில் தனக்கான இடத்தை எப்பொழுதும் வைத்திருப்பவர்கள். அதோடு, இவர்கள் தங்கள் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிகிறார்கள். இவர்களை நம்பி எந்த வேலையும் கொடுக்கலாம். அதே சமயம் இவர்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள். தன் பொறுப்புகளை அறிந்து ஒரு அரசனை போல் செயல்படுவார்கள்.

அக்டோபர்:

இந்த மாதத்தில் பிறந்த ஆண்கள் மிகவும் ஒழுக்கமாக வாழக்கூடியவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள். இவர்கள் ஒரு லட்சியவாதி. மேலும், இவர்கள் யாருக்கும் அடிபணிந்து வேலை செய்வதை விரும்பமாட்டார்கள். மிகவும் நேர்மையான குணம் கொண்டவர்கள். ஒரு அரசன் எப்படி தெளிவாக முடிவு எடுத்து மக்களை வழி நடத்துவார்களோ அதேபோல் இவர்கள் செயல்படுவார்கள்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US