ஒவ்வொரு பெண்ணிற்கும் மாங்கல்யம் என்பது ஒரு பொக்கிஷம் போன்றது. அதை அவர்கள் தெய்வத்திற்கு இணையாக போற்றி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள்.
அந்த வகையில், பெண்கள் தாலி சரடு அணியும் பொழுது சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் அதைப்பற்றி பார்ப்போம்.
பெண்கள் தாலி சரடு வாங்கும் பொழுது அதை ஒற்றைப்படையில் வாங்க வேண்டும். அதாவது 3,5 7, 9, 11 ஆகிய எண்ணிக்கையில் தாலி சரடு வாங்குவது சிறந்தது. இவர்கள் இரட்டைப் படையில் வாங்க கூடாது. அதாவது, இரண்டு, நான்கு, பவுன் இவர்கள் எப்பொழுதும் தாலி சரடு வாங்க கூடாது.

அவர் இரட்டை படையில் போட நேரிட்டால் அதனுடன் இவர்கள் ஒரு குண்டுமணி அளவாவது தங்கம் சேர்த்து போட்டுக் கொள்வது அவசியமாகும்.
மேலும், பெண்கள் அணிந்திருக்கும் தாலி சரடு உடைந்து இருந்தாலும் அல்லது பழுதாக இருந்தாலும் அதை உடனடியாக மாற்றி விடுவதே சிறந்த பலனை கொடுக்கும்.
இவ்வாறு இல்லை என்றால் வீடுகளில் வறுமை, குடும்பத்தினர் இடையே பிரச்சனை போன்ற ஒரு எதிர்மறை நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |