கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட பாட வேண்டிய முருகன் மந்திரம்
ஒரு மனிதனுக்கு கடன் தொல்லை என்பது நேரம் சரியில்லாமல் இருக்கின்றன வேளையில் அளவுக்கு அதிகமாக உயர்ந்துவிடும். அந்த வகையில், கடன் தொல்லை என்றால் மனிதனுக்கு நிம்மதியே இருக்காது.
அந்த வகையில், தீராத கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் அவர்களுடைய கடன் தொல்லையிலிருந்து விடுபட்டு மன தைரியம் பெற செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
அந்த வகையில், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய இந்த எளிய பாடலை செவ்வாய்க்கிழமையன்று பாராயணம் செய்து வருகின்ற பொழுது நாம் நினைத்த காரியங்கள் கைகூடும். அதோடு நான் கடன் தொல்லையிலிருந்து நாம் விரைவில் விடப்படலாம்.

"செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்,
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!"
இந்த மந்திரத்தை தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் முன்பு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்கின்ற நேரத்தில் நிச்சயம் விரைவில் கடன் தொல்லைகள் இருந்து விடுபடலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |