திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் பிரச்னைகளுக்கு நரசிம்மர் மந்திரம்
நோய், மனக்கோளாறு, திருமணத்தடை, குழந்தையின்மை, கடன் பிரச்னைகளால் சிரமப்படுபவர்கள் இந்த நரசிம்மர் மந்திரத்தை 48 முறை தினமும் சொல்லுங்கள். காய்ச்சிய பசும்பாலை நைவேத்தியம் செய்து வழிபட நல்ல தீர்வு கிடைக்கும்.
மாதா ந்ருஸிம்ஹ
பிதா ந்ருஸிம்ஹ:ப்ராதா ந்ருஸிம்ஹ
ஸகா ந்ருஸிம்ஹ:வித்யா ந்ருஸிம்ஹ
த்ரவிணம் ந்ருஸிம்ஹ:ஸ்வாமி ந்ருஸிம்ஹ
ஸகலம் ந்ருஸிம்ஹ:இதோ ந்ருஸிம்ஹ
பரதோ ந்ருஸிம்ஹ:யதோ யதோ யாஹி:
ததோ ந்ருஸிம்ஹ:ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே:
நரசிம்மனே தாய், நரசிம்மனே தந்தை. சகோதரனும் நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே. எஜமானனும் நரசிம்மனே
எல்லாமும் நரசிம்மனே. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே.
எங்கெங்கு நீ செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை. அதனால் நரசிம்மனே; உம்மைச் சரணடைகிறேன்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |