இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அலைகள் கொந்தளிக்காது.., ஏன் தெரியுமா?
இராமாயணத்தில் ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்திருந்தான்.
பின் ஸ்ரீராமன் வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று போரிட்டு சீதையை மீட்டு வந்தான்.
சில காலம் அன்னியன் வசம் சீதை இருந்ததால் ஊரார் அவளை தவறாய் பேசி விடக் கூடாதென, ராமன் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டான்.
இதனால் சீதை, "அக்னி தேவனே நான் உனக்குள் இறங்குகிறேன். நான் கற்பிழந்திருந்தால் என்னை பொசுக்கி விடு" என கூறியபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள்.
சீதையின் கற்பின் வெம்மை அக்னி தேவனை சுட்டெரித்தது. "சீதை பரிசுத்தமானவள். இவளை சுட்டுப் பொசுக்க என்னால் இயலாது" எனக் கூறியபடியே சீதையை கையில் ஏந்தி ராமனிடம் ஒப்படைத்தான்.
பின் அக்கினி தேவன் தனது வெம்மையை தீர்க்க, அருகிலிருந்த ராமேஸ்வரக் கடலில் குதித்தான்.
அக்னி தேவன் கடலுக்குள் இறங்கியதால் ராமேஸ்வரக் கடல் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து, கடல்வாழ் உயிரினங்கள் துடித்தன. இதனால் கடலரசன் அலறினான்.
சீதையிடம் அனைவரும் சென்று தஞ்சமடைய, அக்னி தேவனின் சூட்டைத் தணித்து கடலரசனை சாந்தப்படுத்தி அனைத்து உயிரினங்களையும் சீதை காப்பாற்றினாள்.
தன்னை பணிந்து நின்ற அக்னி தேவனை ஆசிர்வதித்த சீதை, இன்றிலிருந்து இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று உமது பெயரால் அழைக்கப்படும், மற்ற கடல்களைப் போல் சீற்றம் கொள்ளாமல் பூமா தேவியின் மகளான என்னைப்போல் சாந்தமாய் விளங்கும் என அருளினாள்.
அதோடு, இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போகும் எனவும் அருளினாள். அன்றிலிருந்து ராமேஸ்வர கடலில் அலைகள் அடிப்பதில்லை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |