விதியை மாற்றும் பள்ளியறை பூஜை ரகசியங்கள்
பொதுவாக கோவில்களில் நடக்கும் ஒவ்வொரு பூஜையும் சிறப்புக்குரியது. காலை பள்ளியறை பூஜை துவங்கி, இரவு பள்ளியறை பூஜை வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இவற்றில் ஒவ்வொரு பூஜைக்கும் ஒரு பலன் உண்டு.
அவற்றில் சகல நலன்களையும் பெற்று தரும் முக்கிய பூஜையும் உண்டு. அதில் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பூஜைய இது தான். அது தான் பள்ளியறை பூஜை. எல்லா கோயில்களிலும் நடக்கும் பள்ளியறை பூஜை விசேஷமானது என்றாலும் சிவன் கோவில்களில் நடக்கும் பள்ளியறை பூஜை கூடுதல் சிறப்பை தரக்கூடியதாகும்.
அதாவது கோயில்களில் நடை சத்துவத்திற்கு முன்பாக சுவாமி மற்றும் அம்பாளை பள்ளியறை ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டி பாடல்கள் பாடி பூஜை செய்வார்கள். இதனை பள்ளியறை பூஜை என்பார்கள். 44 ஆயிரம் பழமையான சிவாலயங்களில், 36 ஆயிரத்திற்கும் அதிகமான ஆலயங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பள்ளியறை பூஜை நடைபெற்று வந்துள்ளது.
ஆனால், இப்பொழுது இந்த பள்ளியறை பூஜை மிக குறைவான சிவாலயங்கள் மட்டுமே நடக்கிறது. அப்படியாக, இந்த பள்ளியறை பூஜையின் சிறப்புக்கள் பற்றி பார்ப்போம். கருவறையில் பல்லக்கில் புறப்படும் சிவபெருமானை, பக்தர்கள் பலரும் சுமந்து செல்வார்கள் அப்பொழுது சிவபுராணமும் பதிகங்களையும் பாடுவார்கள்.
ஈசன் பள்ளியறை வந்த பிறகு அம்பாள் ஈசனின் திருப்பாதங்களுக்கு பூஜை செய்து அழைத்துச் செய்வார். பின்னர் சுவாமி- அம்பாளுக்கு பால், பழங்கள் நைவேத்தியமாக வைத்து, ஊஞ்சல் சேவை நடத்தி, பாசுரங்கள் பாடி திருக்கதவுகள் மூடப்படும்.
இந்த பள்ளியறை பூஜையானது சுமார் அரை மணி நேரம் வரை நடைபெறும். இந்த பூஜையை காண்போருக்கு கோடி புண்ணியங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு பள்ளியறை பூஜையை சிறப்பான நாட்களில் தரிசனம் செய்வது இன்னும் சிறந்த பலனை கொடுக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
சிலர் வீடுகளில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் உண்டாகும். அல்லது காரணமே இல்லாமல் பிரிந்து வாழ்வார்கள். இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ அசுபதி நட்சத்திரம் சேர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ்வார்கள்.
வாழ்க்கையில் தடைகள் விலகி வெற்றி பெற திங்கட்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்பது வெற்றியையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். மேலும், திருமண தாமதம் ஏற்படும் பெண்களும், ஆயில்யம், கேட்டை, மூலம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்களும் ஒரு வருட காலம் செவ்வாய் தோறும் இந்த பூஜையில் பங்கேற்றால் விரைவில் திருமணம் கைக்குடி வருவதோடு நினைத்த கணவனுடன் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
அனைத்து விதமான சித்திகளும் கிடைக்க, அனுஷம் நட்சத்திரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் பள்ளியறை பூஜையில் பங்கேற்க வேண்டும். கணவன் மற்றும் மனைவி உடல் ஆரோக்கிய குறைபாடுகள் சரியாக வெள்ளிக்கிழமை பள்ளியறை பூஜையில் பங்கேற்பது நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சனிக்கிழமை நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொள்ள விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதோடு, பள்ளியறை பூஜையில் பங்குகொள்பவர்கள் பூஜைக்கு தேவையான பால், நைவேத்தியங்கள் கொடுப்பவர்களுக்கு, பொருளாதார கஷ்டங்கள் விலகும்.
கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு நல்ல முறையில் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க பள்ளியறை பூஜையில் பங்குகொண்டு முடிவில் பசுவுக்கு பழங்கள் கொடுத்து வந்தால், அவர்களுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும். அதோடு பிறக்கும் குழந்தை நல்ல இறை சிந்தனையோடு பிறக்கும்.
பள்ளியறை பூஜை முடிவில் அன்னதானம் செய்பவர்களுக்கு தொழில் நல்ல லாபம் கிடைக்கும். சில ஆலயங்களில் பள்ளியறை பூஜை நடைபெறுவதில்லை. அவ்வாறான ஆலயங்களுக்கு பள்ளியறை கட்டுவதும், மீண்டும் பள்ளியறை பூஜையைத் தொடங்க முயற்சி மேற்கொள்வதும் கோடி புண்ணியத்தைத் தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |