வீட்டில் பணம் தங்கவில்லையா? இந்த 6 விஷயங்கள் தான் காரணமாம்
ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் மிகவும் தேவையான ஒன்றாகும். மேலும், சிலருக்கு எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவர்கள் கையில் பணம் தங்குவதில்லை என்று சொல்லி பார்த்துஇருப்போம். அப்படியாக, ஆன்மீகத்தில் வீட்டில் பணம் தாங்காமல் இருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதைப்பற்றி பார்ப்போம்.
1) சிலர் வீடுகளில் எப்பொழுதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அவர்கள் மனதில் அன்பை தாண்டி கோபம் தான் அதிகம் இருக்கும். அவ்வாறான சூழலில் அவர்கள் வீடுகளில் பணம் தங்குவதில்லை என்கிறது சாஸ்திரங்கள்.
2) நாம் எப்பொழுதும் வீடுகளில் பால், தயிர் போன்ற விஷயங்களை கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அந்த பொருட்கள் கெட்டுப்போக அவை வீட்டின் அதிர்ஷ்டத்தை பாதிக்கிறது.
3) குடும்பத்தில் தேவையான இடத்தில் பணத்தை செலவு செய்யாமல் கஞ்சத்தனம் பார்ப்பதும் அவர்கள் வீடுகளில் பணம் தாங்காமல் போவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.
4) சிலர் வீடுகளில் பூஜை அறையில் விளக்கு ஏற்றாமல் எப்பொழுதும் இருட்டாக போட்டு வைத்திருப்பார்கள். அவ்வாறான சுழலும் வீடுகளில் பொருளாதார சிக்கலை கொண்டு வரும்.
5) நாம் ஒரு பொழுதும் பூஜை பொருட்களை பயன்படுத்தாமல் தூசி அடையச்செய்யக்கூடாது. அவை கட்டாயம் நிதி நிலையில் சில நெருக்கடிகளை கொடுக்கும்.
6) நாம் வீடுகளை எப்பொழுதும் சுத்தமாக வைக்க வேண்டும். கிழிந்த மற்றும் தேவை இல்லாத பொருட்களை உடனே அகற்றி விடவேண்டும். வீடுகளில் குப்பை சேருவதும் பொருளாதாரத்தில் சிக்கலை உண்டு செய்யும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |