நீண்ட ஆயுளுடன் வாழ பாட வேண்டிய பதிகம்

By Sakthi Raj Aug 08, 2024 02:00 PM GMT
Report

பிறப்பு என்பது இறைவன் கொடுத்தது.அப்படியாக ஒருவன் நல்ல படியாக வாழ அவனுக்கு நல்ல ஆயுள் அவசியம்.

என்னதான் அறிவு பணம் பதவி என்று இருந்தாலும் அவனிடம் நல்ல பண்புகளும் கடவுளின் அருளும் இல்லையென்றால் அவன் மனிதன் என்ற தன்மையில் இருந்து குறைந்தே இருக்கின்றான்.

அப்படியாக ஒருவர் நல்ல மனதோடு நீண்ட ஆயுளுடன் வாழ சிவபெருமானுடைய பதிகம் இதை பாடினால் மனதில் நிம்மதியும் தெம்பும் கிடைக்கும்.

நீண்ட ஆயுளுடன் வாழ பாட வேண்டிய பதிகம் | Pathigam Siva Peruman Valipaadu

துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று
அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே.

நாளை வானில் கருடனை தரிசித்தால் இத்தனை நன்மைகளா?

நாளை வானில் கருடனை தரிசித்தால் இத்தனை நன்மைகளா?


பொருள்

தூங்கும்பொழுதும், விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் திருஐந்தெழுத்தை நினைத்துப் போற்றுங்கள்.

பல வழிகளில் திரிந்து செல்லும் தன்மையுடைய மனத்தை அவ்வாறு செல்லவிடாமல் தடுத்து ஒருமுகப்படுத்தி இறைவனையே நினைத்து அவன் திருவடிகளை வாழ்த்திப் போற்றிய மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து அழித்தன திருவைந்தெழுத்தே.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US