உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் எது?

By Sakthi Raj Jul 15, 2024 07:00 AM GMT
Report

வாழ்க்கையில் தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.அதே போல் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களுக்கு கண்டிப்பாக இந்த உலகில் ஒரு தீர்வை கொடுக்ககூடிய பரிகாரங்கள் இருக்கிறது.

பொதுவாக நாம் செய்த தவறை மனதளவு நினைத்து வருந்தினாலே அதற்கான பலன் கிடைக்கும்.இருந்தாலும் அது தொடராமல் இருக்க சில பரிகாரங்கள் செய்ய அது நிவர்த்தி ஆகும்.

அப்படியாக உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் எது என்பதை பார்ப்போம். அகிலம் காக்கும் அண்ணாமலையார் அவர்களை சரண் அடைந்தால் அனைத்து பாவங்கள் தீர்ந்து புண்ணியம் சேரும்.

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் எது? | Pavam Punniyam Karma Parigarangal Annamalaiyar

அதுமட்டும் அல்லாமல் அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரமாக கருதபப்டுகிறது.

அதிலும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேளை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன.

வினைபதிவை எப்படி அழிப்பது

வினைபதிவை எப்படி அழிப்பது


அதை தெரிந்து கொள்வோம். அதாவது கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தருகிறது.

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் எது? | Pavam Punniyam Karma Parigarangal Annamalaiyar

வாழ்க்கையில் எத்தனை பெரிய பிரச்சனைகளுக்கும் நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும்.

மேலும் பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது. ஓம் நமச்சிவாய என்று சொன்னாலே முக்தி கிடைக்கும்.

அதுமட்டும் அல்லாமல் அப்பன் கோயிலுக்கு சென்று அவனை தரிசித்து இந்த பரிகாரம் செய்ய மனம் தெளிவு அடையும்.

உலகில் தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவுமே இல்லை.ஆக எதற்கும் மனம் வருந்தாமல் இறைவன் சரணடைவோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US