ஆடி செவ்வாய் அன்று பெண்கள் மட்டும் கடைபிடிக்கவேண்டிய ஒளவையார் விரதம்

By Sakthi Raj Jul 23, 2024 07:00 AM GMT
Report

ஆடி மாதம் என்றாலே பெண்கள் அம்மனுக்கு பல நேர்த்தி கடன்கள் விரதங்கள் இருப்பார்கள்.அப்படியாக பெண்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் ஒளவையார் விரதம் இருப்பது உண்டு.

ஆனால் பலருக்கும் ஒளவையார் விரதம் பற்றி தெரிவதில்லை,இப்பொழுது ஒளவையார் விரதம் என்றால் என்ன?அது எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஒளவையார் விரதத்தின்போது இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒரு வீட்டில் ஒன்று சேர்வார்கள்.

ஆடி செவ்வாய் அன்று பெண்கள் மட்டும் கடைபிடிக்கவேண்டிய ஒளவையார் விரதம் | Pengal Mattum Kadaipidikavendiya Viratham

இதில் மூத்த சுமங்கலிகள் வழிகாட்டுதலின்படி, இளம் பெண்கள் ஒளவையார் விரதத்தை தொடங்குவார்கள். இவ்விரதத்தின் நிவேதனமாக பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள்.

அன்றைய தினம் செய்யும் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். ஒளவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.

ராகு கேது தோஷங்களை நீக்கும் சென்னை மயிலை முண்டககன்னி அம்மன்

ராகு கேது தோஷங்களை நீக்கும் சென்னை மயிலை முண்டககன்னி அம்மன்


அதன்பின் ஒளவையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பார்கள். இறுதியாக பெண்களே விரத நிவேதனங்கள் அனைத்தையும் உண்பார்கள்.இவ்விரதத்தில் ஆண்களை கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை.

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கவும், திருமணம் கைகூடவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கணவன் நீண்ட ஆயுள் பெறவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US