27 நட்சத்திரக்காரர்களினுடைய குண நலன்கள் என்ன ? தெரிந்து கொள்ளலாம் வாங்க
ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அப்படியாக 27 நட்சத்திரக்காரர்கள் உடைய குணாதிசயங்கள் என்னவென்று பார்ப்போம்.
அஸ்வினி:
இவர்கள் மிக செல்வந்தராகவும் புத்திசாலியாகவும் விவாதம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.
பரணி:
இவர்கள் நன்றி உணர்வுடன் இருக்கக்கூடியவர்கள். திறமைசாலி தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். எதிரிகளை வெல்லக்கூடியவர்கள். வசதியான வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
கார்த்திகை:
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். படிப்பு அவ்வளவு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் வாழ்கையில் நல்ல வசதிகளோடு வாழ்வார்கள்.

ரோகிணி:
இவர்கள் ஊர் சுற்றிப் பார்ப்பதில் அதிக ஆசைக் கொண்டவர்கள். வசீகரமான தோற்றம் கொண்டிருப்பார்கள்.
மிருகசீரிடம்;
இவர்கள் தைரியமாக செயல்பட கூடியவர்கள். முன்கோபம் அதிகமாக இருக்கும். செல்வம் சேர்ப்பதில் ஆர்வம் உண்டு.
திருவாதிரை:
எளிமையாக இருப்பார்கள். சாமர்த்திய சாலியாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கக்கூடிய பொறுப்பு உண்டு.
ஆயில்யம்:
செல்வந்தராக இருப்பார்கள். அதிக செலவாளியாக இருப்பார்கள். நேர்மை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மகம்:
இவர்களுக்கு ஆராய்ச்சி மனப்பான்மை அதிகம் இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இனிமையாக பழகக் கூடியவர்கள்.
பூரம்:
மிகவும் ஒழுக்கமானவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். விவசாயத்தில் ஆர்வம் இருக்கும். பேச்சு திறன் உள்ளவர்கள்.
உத்திரம்:
நாணயமாக விளங்க கூடியவர்கள். பக்தி அதிகம் இருக்கும். நட்புடன் பழகக் கூடியவர்கள்.

ஹஸ்தம்:
ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் உண்டு. நகைச்சுவையாக பேசக்கூடியவர்கள். தாயின் மீது அதிக அன்பு இருக்கும்.
சித்திரை:
ஊர் சுற்றுவதில் அதிக ஆர்வம் கொள்வார்கள். தைரியசாலியாக இருப்பார்கள். ஒருவர் மீது இரக்க குணம் அதிகம் இருக்கும்.
சுவாதி:
புத்தி கூர்மையானவர்கள். யோசித்து செயல்பட கூடியவர்கள். பழகுவதற்கு இனிமையானவர்கள் நம்பிக்கையானவர்கள்.
விசாகம்:
வியாபாரத்தில் அதிக ஆர்வம் இருக்கும். தற்பெருமை கொண்டவர்கள்.
அனுஷம்:
நேர்மையானவர்கள் அரசியலில் அதிக முன்னேற்றம் உண்டு. துணிச்சலாக செயல்பட கூடியவர்கள். குறும்பு உண்டு. புகழ்மிக்கவர்களாக இருப்பார்கள்.
மூலம்:
சுறுசுறுப்பாக இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீதிமானாக இருப்பார்கள்.
பூராடம்:
செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பார்கள். வாக்குவாதத்தில் வல்லவர்களாக இருப்பார்கள். கடமை செய்வதில் ஆர்வம் உண்டு.
உத்திராடம்:
தைரியசாலி மற்றும் கலையில் சிறந்த வழங்குவார்கள். பொறுமைசாலி நினைத்ததை சாதிக்க கூடியவர்கள்.
திருவோணம்:
ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உண்டு. சமூக சேவை செய்வார்கள். பிறரை மதிக்க கூடிய தன்மை இருக்கும்.
அவிட்டம்:
கம்பீரமானவர்கள் செல்வாக்கு அதிகம் இருக்கும். தைரியசாலி முன்கோபம் சற்று அதிகம் வரும் .
சதயம்:
வசீகரமான தோற்றம் உண்டு. செல்வந்தராக இருப்பார்கள். பொறுமையுடன் செயல்படக்கூடியவர்கள். ஒழுக்கமானவர்கள்.
பூரட்டாதி:
மனதில் தைரியம் அதிகம் இருக்கும். பழகுவதற்கு இனிமையாக இருப்பார்கள். குடும்பத்தை நேசிக்கக் கூடியவர்கள்.
உத்திரட்டாதி:
கல்வியில் சிறந்து விளங்குபவர்கள். சாதுரியமாக பேசுபவர்கள். பக்தியில் சிறந்து விளங்குவார்கள். கடமைதவறாதவர்கள்.
ரேவதி:
தைரியசாலியாக இருக்க கூடியவர்கள் மிகவும் நேர்மையாக செயல்படுவார்கள். எதிரியை வெல்லக்கூடியவர்கள். தற்பெருமை அதிகம் பேசக்கூடியவர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |