நினைத்தது நிறைவேற சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

By Sakthi Raj Jun 09, 2025 01:00 PM GMT
Report

 உலகம் எங்கிலும் சாய் பாபாவின் பக்தர்கள் அதிகம் இருக்கிறார்கள். சாய் பாபாவை நினைத்து என்ன வேண்டுதல் வைத்தாலும் அதை சாய்பாபா நிறைவேற்றி வைப்பதாக பக்தர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

அதாவது சாய் பாபா பல அதிசயங்கள் நிகழ்த்தும் ஒரு மிக பெரிய சக்தி என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சாய் பாபா வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக வியாழக்கிழமை இருக்கிறது. அன்றைய தினம் பல சாய் பக்தர்கள் விரதம் இருந்து சாய் பாபா ஆலயம் சென்று அவர்கள் வழிபாடு செய்து விடுவார்கள்.

முடியாதவர்கள் வீட்டில் இருந்தப்படியே பூஜைகள் செய்து சாய் வழிப்பாட்டை மேற்கொள்வார்கள். அப்படியாக, நாம் சாய் பாபா வழிபாடு செய்யும் பொழுது சாய் பாபாவின் மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்தால் நம்முடைய வேண்டுதல் மிக விரைவில் சாய் பாபாவின் அருளால் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நினைத்தது நிறைவேற சாய்பாபாவின் இந்த மந்திரத்தை சொல்லுங்கள் | Powerfull Saibaba Mantras To Chant On Thursday 

1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்.

தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

2. ஷீரடி சாய் பாபாவின் த்யான ஸ்லோகம்:

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி.

ஜோதிடம்: உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசிகள் யார் தெரியுமா?

ஜோதிடம்: உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசிகள் யார் தெரியுமா?

 

3.நினைத்த காரியம் நடக்க:

"ஓம் சாய் குருவாயே நமஹ
ஓம் ஷீரடி தேவாயே நமஹ
ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"

இந்த மந்திரங்களை முழுமனதோடு சாய்பாபாவை வேண்டி பாராயணம் செய்து வர அவர்கள் வாழ்வில் நிச்சயம் சாய் பாபாவின் அருளால் பல அதிசயங்கள் நடப்பதை பார்க்கலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US