பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள்

By Sakthi Raj Apr 15, 2024 05:25 AM GMT
Report

வீட்டில் தீபம் போடுவது என்பது பல நன்மைகளையும்,மாற்றங்களையும் தரும்.வீட்டில் தினம் இறைவனுக்கு விளக்கு போடுவதால் வீட்டில் இருக்கும் கஷ்டம் படி படியாக குறைந்து நன்மைகள் உண்டாகும்.

அப்படியாக ஒருவர் பிரம்ம முகூர்தத்தில் ஏற்றும் தீபம் அத்தனை சக்தி வாய்ந்ததாக இருக்கிறது,அதை பற்றி பார்ப்போம்.

தினமும் அதிகாலை 3 மணி துவங்கி 5.30 மணி வரையிலான காலத்தை பிரம்ம முகூர்த்த வேளை என்கிறோம். இந்த நேரம் அனைத்து விதமான சுபகாரியங்களும் செய்வதற்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.

பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் | Pramma Mukurtham Nanmaigal Deepam Parigarangal

பிரம்ம முகூர்த்த காலத்தில் வழிபாடு, படிப்பு, தியானம் என எதை செய்தாலும் அதற்கான முழு பலனும் நமக்கு அப்படியே கிடைக்கும் என்கின்றனர். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தெய்வத்தை நினைத்து வழிபட்டால் பல விதமான பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.

மேலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் மனதில் நினைத்து தீபம் போட வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நடக்கும் .

இப்பொழுது பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றும் முறை பற்றி பார்ப்போம்.

பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவது மிக நல்லது. இந்த சமயத்தில் வீட்டில் அனைத்து தெய்வங்களும், அனைத்து தேவர்களும் வாசம் செய்கிறார்கள். பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3 மணி தொடங்கி 5.30 மணி வரையிலான காலமாகும்.

பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் | Pramma Mukurtham Nanmaigal Deepam Parigarangal 

அந்த நேரத்தில் விளக்கேற்ற முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 6 மணிக்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும். காலை, மாலை இரு வேளைகளும் வீட்டில் விளக்கேற்றுவது நல்லது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கேற்ற வேண்டும்.

எத்தனை முகம் விளக்கேற்றலாம்? அதனால் என்ன பலன்கள்?

ஒருமுகம் - நற்பலன்களை மத்திமமாக தரும்இருமுகம்,குடும்ப ஒற்றுமைமூன்று முகம் ,புத்திரர்கள் தொடர்பான இன்பங்களை பெற்று தரும்.

நான்கு முகம் - அஷ்டலட்சுமிகளின் அருளோடு சர்வ நலன்களையும் தரும்.

ஐந்து முகம் - வீட்டில் செல்வம் எப்போதும் செழித்துக் கொண்டே இருக்கும்.

பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்றுவதால் ஏற்படும் நன்மைகள் | Pramma Mukurtham Nanmaigal Deepam Parigarangal

எத்தனை விளக்குகள் ஏற்றலாம் ?

காமாட்சி விளக்கு, அகல் விளக்கு, ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கான விளக்கு, வெள்ளி விளக்கு என எந்த விளக்கு ஏற்றினாலும் ஒரு விளக்காக ஏற்றுவதை வித இரண்டு விளக்காக ஏற்றுவதே சரியானது. ஒரு காமாட்சி விளக்கு, ஒரு அகல் விளக்கு என்றும் ஏற்றலாம். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தீபங்கள் என்பதே விஷேச பலன்களை தரும்.

கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு


விளக்கு ஏற்றக் கூடிய, கூடாத திசைகள்

கிழக்கு - துன்பம் அனைத்தும் நீங்கும்.

மேற்கு - கடன்களையும், தோஷங்களையும் நீக்கும்

வடக்கு - செல்வம், ஞானம், அறிவு ஆகியவற்றை வளர்க்கும்

தெற்கு - தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.

இப்படியாக ஒருவரது வீட்டில் பல நாள் தடங்கல் பட்ட காரியம் நிறைவேற பண கஷ்டம் விலக பிரம்ம முகூர்தத்தில் விளக்கேற்ற நிச்சியம் அதற்கான பலன் கிடைக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US