விஷ்ணு புராணம்: கலியுக முடிவில் இந்த 5 விஷயங்கள் கட்டாயம் நடக்குமாம்

By Sakthi Raj Jun 15, 2025 05:37 AM GMT
Report

 விஷ்ணு புராணத்தில் கலியுகத்தில் எந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும். மக்கள் எவ்வாறு வாழ்வார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படியாக, கட்டாயம் கலியுக முடிவில் கட்டாயம் குறிப்பிட்ட இந்த 5 விஷயங்கள் நடக்கும் என்கிறார்கள்.

அவை என்னெவென்று பார்ப்போம். பொதுவாக பூமியில் உள்ள ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கிறது. ஆனால், இந்த கலியுகம் மற்றும் தான் மிகவும் மோசமான யுகமாக பார்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.

ஆனி மாதத்தில் இந்த பொருட்களை தானம் செய்வதால் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

ஆனி மாதத்தில் இந்த பொருட்களை தானம் செய்வதால் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

அதாவது இந்த கலியுகத்தில் தர்மத்தை நிலைகுலைத்து, மனிதர்கள் சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல், கருணை மற்றும் இரக்கம் போன்ற மனிதப் பண்புகளை மறந்து வாழும் சூழல் அமையும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும், கலியுகத்தில் மனிதர்கள் தோற்றம் ஆயுட்காலம் இவை எல்லாம் எவ்வாறு அமையும் என்று விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது. அவை நம்மை மிகுந்த ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது.

விஷ்ணு புராணம்: கலியுக முடிவில் இந்த 5 விஷயங்கள் கட்டாயம் நடக்குமாம் | Prediction About Kaliyugam In Vishnu Puranam Tamil

1) இந்த கலியுகம் பொறுத்தவரையில் பணம் இருப்பவர்களே பலசாலி. அந்த பணம் எந்த வழியில் வந்தாலும் சரி பணம் படைத்தவன் மட்டுமே பலசாலி ஆகின்றான். அவர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் சொல்ப்படி தான் மக்கள் கேட்டு நடப்பார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

2) கலியுகத்தில் இளம் வயதிலே மக்கள் நரை முடியை சந்தித்து விடுவார்களாம். அதாவது 12 வயதை தொடும் பொழுதே நரை முடி வந்து, 20 வயதிற்குள் அவர்கள் ஆரோக்கியம் குறைந்து ஆயுட்காலமும் குறைந்து விடுமாம்.

3) கலியுகம் பொறுத்த வரையில் மக்களின் ஆயுட்காலம் மிக மிக குறைவு என்கிறது விஷ்ணு புராணம். அதாவது 20 வயதிற்குள் மனிதர்கள் இறக்க நேரிடும் என்கிறது.

4) கலியுகத்தில் மனிதர்களின் கண்களின் அளவு குறைந்து காணப்படுமாம். விரைவில் அவர்களின் பார்வை மங்கி ஒருவரை ஒருவர் பார்த்து கொள்வதில் சிக்கல்கள் உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.

5) விஷ்ணு புராணப்படி கலியுகம் உச்சத்தை தோடும் பொழுது மனிதர்களின் உயரமும் மிகவும் குறைந்து விடுமாம். இப்பொழுது சராசரியாக மனிதர்கள் இருக்கும் அளவை காட்டிலும் கலியுக முடிவில் மக்கள் மிகவும் குறைந்த உயரத்துடன் காணப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US