புதன் கிழமையில் யாரை வணங்கினால் நன்மை உண்டாகும்

By Sakthi Raj Jul 10, 2024 08:00 AM GMT
Report

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.அப்படியாக புதன்கிழமை புதன் பகவானை வழிபடுவது மிகுந்த சிறப்பை தரும்.

அன்று பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து, புதன் பகவானுடைய படத்திற்கு முன்பு தாமரை கோலம் போட்டு, அதன்பின் ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதன்மேல் மாவிலை வைக்க வேண்டும்.

அந்த கலசத்தை புதன் பகவானாக பாவித்து, பச்சை துணியை அணிவித்து, பூக்களால் அலங்கரித்து கொள்ளுங்கள்.

புதன் கிழமையில் யாரை வணங்கினால் நன்மை உண்டாகும் | Puthan Bagavan Vazhipadu Worship

புதன் பகவானுக்கு பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்பு பண்டங்களை நைவேத்தியமாக படைத்து இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, தூபம், கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

விளக்கு ஏற்ற உகந்த நேரம் எது?

விளக்கு ஏற்ற உகந்த நேரம் எது?


காலை மற்றும் மாலை வேளைகளில் இதேபோல் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் இருக்க முடிந்தால், முழு நாள் விரதம் இருக்கலாம்.

அப்படி முடியாதவர்கள் பால், பழங்கள் போன்ற எளிய உணவுகளை உட்கொள்ளலாம்.அப்படி செய்ய புதன் பகவான் அருளை நாம் பரிபூர்ணமாக கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US