ராகு கேது தோஷம் நீங்க எளிய பரிகாரம்

By Sakthi Raj Jun 21, 2024 11:00 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவானுக்கு நிகரான வலிமை கொண்ட கிரகங்களாக ராகு – கேது கிரகங்கள் இருக்கிறது. ராகு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதகர் யாரும் எட்ட முடியாத பல சாதனைகளை செய்யக்கூடிய நிலையில் இருப்பார்.

அதே நேரம் ஒருவரின் ஜாதகத்தில் ராகு கிரகம் பாதகமான நிலையில் இருந்தால், அந்த ஜாதகருக்கு ராகு தோஷம் ஏற்பட்டு வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்க நேர்கிறது.

ராகு கேது தோஷம் நீங்க எளிய பரிகாரம் | Raaghu Kethu Dosham Parigaram Tirunageshwaram News

இத்தகைய ராகு தோஷம் நீங்க நாம் செல்ல வேண்டிய கோயில் பற்றி பார்ப்போம். ஒருவருக்கு ராகு கேது தோஷம் இருந்தால் அவர்கள் செல்ல வேண்டிய முக்கியமான பரிகார தலமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் திருநாகேஸ்வரம் கருதப்படுகிறது.

அப்படி ஒருவர் தங்களுக்கு இருக்கிற ராகு கேது தோஷம் கழிக்கவேண்டும் என்று முடிவு செய்து வீட்டால் திருநாகேஸ்வரம் சென்று முதல் நாள் இரவே தங்கி விட வேண்டும்.

மறுநாள் காலை எழுந்ததும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் திருக்குளத்திற்கு சென்று குளித்து கோயிலில் இருக்கின்ற நாகநாத சுவாமி மற்றும் கிரிகுஜாம்பிகை அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும்.

வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?

வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?


மேலும் அங்கு ராகு பகவானுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருநாகேஸ்வரம் ராகு பகவானுக்கு ஒவ்வொரு தினமும் காலை 9.30 முற்பகல் 11.30 மற்றும் மாலை 5.30 மணிக்கு பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஜாதகத்தில் ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களின் தோஷம் தீர இங்கிருக்கின்ற ராகு பகவானுக்கு காலை 9.30 அல்லது முற்பகல் 11.30 ஆகிய காலங்களில் செய்யப்படுகின்ற பாலாபிஷேக பூஜையின் பொழுது தங்கள் தோஷம் நீங்குவதற்கும் பாலாபிஷேகத்தில் கலந்து கொண்டால் நன்மை தரும்.

இராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது தங்களின் மனதிற்குள்ளாகவே ராகு பகவானை நினைத்து, தங்களின் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் நற்பலன்களை ராகு பகவான் அருள வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

ராகு கேது தோஷம் நீங்க எளிய பரிகாரம் | Raaghu Kethu Dosham Parigaram Tirunageshwaram News

பிறகு கோயிலுக்குள்ளாக மற்றொரு சன்னதியில் இருக்கின்ற உற்சவர் ராகு பகவானுக்கு மலர் மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு கோயிலை 9 எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும்.

ஒருவருக்கு ராகு கேது தோஷம் இருந்தால் அவர்கள் நிலையாக எந்த வேலை செய்ய முடியாது.திருமண தாமதம் தொழில் விரக்தி,திருமணம் ஆகி இருந்தால் குழந்தை தாமதம்,கணவன் மனைவி இடையே தேவை இல்லாத சண்டை என்று வாழ்க்கை போர்க்களமாக இருக்கும்.

ஆக இந்த பிரச்சனைகளுக்கு சில நேரங்களில் நாமும் காரணமாக இருந்தாலும் நம்மை செயல் படுத்துவது கிரகங்கள் ஆகும்.

ஆக இதற்கெல்லாம் வருந்தி நாட்களை வீணாக்காமல் ராகு கேது தலத்திற்கு சென்று விரைவில் பரிகாரம் செய்ய வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனையும் முடிவிற்கு வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US