ராகு: யாருக்கு எப்பொழுது கோடிகளை அனுபவிக்கும் யோகத்தை வழங்குவார்?
ஜோதிடத்தில் ராகு கேது மிக மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறது. அதாவது ஜாதகத்தில் நீதிமானாக இருக்கக்கூடிய சனி பகவானை காட்டிலும் ராகு கேதுவின் ஆற்றல் அதிக அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. நிழல் கிரகமான இவர்கள் ஒரு மனிதன் எந்த அளவிற்கு யோகத்தையும், சோகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று சரியாக தீர்மானித்து விடுகிறார்கள்.
அப்படியாக, சர்ப்ப கிரகங்களில் ஒருவராக கருதப்படுபவர் ராகு பகவான், இவர் 18 மாதம் ஒருமுறை அவரின் ராசியை மாற்றுகிறார். இந்த ராகுவின் நிலை வைத்து தான் அந்த ஜாதகர் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்களும், அதிசயங்கள் நடக்கிறது.
அந்த வகையில் ராகுவிற்கு உரிய நட்சத்திரமாக திருவாதிரை, ஸ்வாதி, சதயம் உள்ளது. இந்த மூன்று நட்சத்திரங்களும் ஒளி நிறைந்த நட்சத்திரம் என்றே சொல்லலாம். அதாவது, திருவாதிரை என்பது சிவபெருமானின் நட்சத்திரம் ஆகும், ஸ்வாதி துலா ராசியில் அமைந்த மகாலட்சுமியின் நட்சத்திரம்.
சதயம், சனியின் கும்ப ராசியில் உள்ளதால், பகுத்தறிவு, மக்கள் மேலாண்மை, அரசியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்க முடியும். அப்படியாக, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே மிகவும் புத்திசாலியாகவும், தொழிலில் சிறந்தும் விளங்குவார்கள்.
அதோடு இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும். ராகு ஜோதிடத்தில் தடைகளை கொடுப்பார் என்று சொல்லப்பட்டாலும் இவர் சில நேரங்களில், விபரீத ராஜயோகம், நீசபங்க ராஜயோகம், சதுர் கேந்திர யோகம் போன்ற பெரும் யோகங்களை உருவாக்குகிறான் என கூறுகின்றனர்.
மேலும், ராகு ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் போன்ற நட்புராசிகளில் ராகு அமர்ந்தால் மிகுந்த பலனைக் கொடுக்கிறார் என்று சொல்லுகிறார்கள். குறிப்பாக ராகு திசை காலங்களில் ராகு ஒருவருக்கு அரசியலில் வெற்றி, பணம், செல்வாக்கு, புகழ் வெளிநாடு செல்லும் யோகம் போன்றவற்றை கொடுக்கிறார்.
சிலருக்கு ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் இருப்பதை நாம் பார்க்க முடியும். அதாவது, எல்லா கிரகங்களும் ராகு கேதுவுக்குள் அமையும்போது, அவை காலசர்ப்ப யோகமாக மாறுகிறது. இந்த கால சர்ப்ப தோஷம் ஒரு சிலருக்கு யோகமாகவும், ஒரு சிலருக்கு தோஷமாகவும் மாறுகிறது.
அது அவர்களின் லக்கினம் பொறுத்தே அமைகிறது. அப்படியாக, ராகு பகவான் பாப கிரகமாக இருந்தாலும் இவர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களை கொடுக்கக்கூடியவர்.
அவரை, முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்து அவருக்குரிய பரிகாரங்கள் செய்தால் ராகு திசை என்பது அவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ஷ்டம் நிறைந்தவையாக மாறும். இவர் அருள் இருந்தால் சாதாரண ஏழை கூட மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |