நீங்கள் அழுவது போல் கனவு வருகிறதா? அப்போ கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் இது நடந்தே தீரும்
கனவு என்பது நாம் தடுக்க முடியாத ஒன்று. சமயங்களில் நம் ஆழ் மனதில் உள்ள எண்ணங்களே கனவுகளின் பிரதிபலிப்பு என்று சொன்னாலும் பெரும்பாலான கனவுகள் நம் எதிர்காலத்தை பற்றிய கணிப்பாகவே ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் திடீர் என்று கனவுகளில் நாம் அழுவது போல் வந்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
பொதுவாக கனவுகளில் நாம் அழுவது போல் வந்தால் அவை நல்ல விஷயமாகவே கருதப்படுகிறது. இவை நம் மனதில் உள்ள நீண்ட நாள் கவலைகள் விலகி மகிழ்ச்சி வருவதை குறிக்கும் அறிகுறிகளாக சொல்கிறார்கள்.
சிலர் நீண்ட நாட்களாக தங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள், அவர்கள் கனவில் அழுவது போல் வந்தால் வெகு விரைவில் அவர்கள் சந்தித்த இன்னல்கள் விலகி மனதில் மகிழ்ச்சி உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், அழுவது போல் கனவு வருவது நம்முடைய பொருளாதாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்றத்தையும் கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், நம் கனவில் வேறு ஒருவர் அழுவது போல் வந்தால் துன்பத்தை குறிப்பதாகும்.
அவ்வாறு கனவு வந்தால் பதட்டம் அடையாமல் சற்று எழுந்து தண்ணீர் அருந்தி விட்டு படுப்பது நல்லது. ஆக, இவ்வாறான கனவுகள் வந்தால் பயம் கொள்ளாமல், அதை பற்றியே நாள் முழுவதும் எண்ணிக்கொண்டு இல்லாமல் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொண்டு இறைவனிடம் விட்டு விடுங்கள். இறைவன் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |