நோய் தீர்க்கும் சாய் பாபா விபூதி

By Yashini May 26, 2024 04:14 AM GMT
Report

சீரடி சாயி பாபா ஒரு இந்திய ஆன்மீக குரு மற்றும் பக்கிரி ஆவார். அவரது வாழ்நாளுக்குப் பிறகு இந்து மற்றும் முஸ்லீம் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

அவரது போதனைகள் அன்பு, மன்னிப்பு, பிறருக்கு உதவுதல், தொண்டு, மனநிறைவு, உள் அமைதி, கடவுள் மற்றும் குரு பக்தி கவனம் செலுத்துகின்றன.

சீரடி சாய் பாபாவின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார். 

நோய் தீர்க்கும் சாய் பாபா விபூதி | Saibaba Story In Tamil

பிரசவம் பார்த்த மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார்.

அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், "பாபா தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று" என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார்.

பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார்.

கொஞ்சம் விபூதியை அவரது வாயில் இட்டார். பின் 5 நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது.

அச்சமயம் அவரது விபூதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.  

  ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US