இன்று சந்திரனை பார்த்தால் உங்க வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும்

By Sakthi Raj May 09, 2024 05:00 AM GMT
Report

சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிரசில் இருக்கக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் சொல்கின்றனர் .

இன்று சந்திரனை பார்த்தால் உங்க வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் | Santhira Vazhipadu Kubeeran Panavaravu Panamazhai

சந்திர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும் இந்த சந்திர வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக விளங்குகிறது. அப்படிப்பட்ட சந்திர வழிபாடு இன்று வியாழக்கிழமை அன்று வருகிறது.

குரு பகவானுக்குரிய கிழமையாகவும் குபேர பகவானுக்குரிய கிழமையாகவும் திகழக்கூடிய வியாழக்கிழமை இந்த சந்திர தரிசனம் வருகிறது என்பதால் குரு பகவான், குபேர பகவான் இவர்களுடைய அருளும் நமக்கு ஒரு சேர கிடைத்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதற்கு பண வரவை அதிகரிக்கும் ஒரு அற்புதமான நாளாக தான் நாளை திகழ்கிறது.

இந்த நாளை எந்த முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இன்று சந்திரனை பார்த்தால் உங்க வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் | Santhira Vazhipadu Kubeeran Panavaravu Panamazhai

வியாழக்கிழமை என்றாலே குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது.

அதனால் அன்றைய தினம் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு. மாலை 6:00 மணிக்கு மேல் மேற்கு திசையில் மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் காணும் பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(09/05/2024)

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(09/05/2024)


அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய நெற்றியில் மஞ்சளை வைத்திருக்க வேண்டும். இதோடு இன்னும் இரண்டு பொருட்களை நம் கையில் வைத்துக் கொண்டு சந்திர தரிசனத்தை செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பண தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும்.

இன்று சந்திரனை பார்த்தால் உங்க வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றம் ஏற்படும் | Santhira Vazhipadu Kubeeran Panavaravu Panamazhai

அந்த பொருட்கள் தான் விரலி மஞ்சள் மற்றும் நாணயம். நாளை மாலை 6:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிறிது மஞ்சளை இழைத்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்களாக இருக்கும் பட்சத்தில் மஞ்சள் நிற பூக்களை தலையில் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. பிறகு கையில் ஒரு விரலி மஞ்சளையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

அப்படி சந்திர தரிசனம் செய்யும் பொழுது நமக்கு தேவையான பண வரவு கிடைக்க வேண்டும் என்றும் வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் சந்திர பகவானை பார்த்து மனதார வழிபட வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பண வரவு கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US