பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது இருந்தால் திருமண வாழ்க்கையில் சிக்கல் உண்டாகுமா?
ஜோதிடத்தில் மங்களகாரகன் செவ்வாய் ஞானக்காரகன் ஆன கேது பகவானுடன் இணைந்து இருக்கும் பொழுது வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்களை அந்த ஜாதகர் சந்திக்கிறார். அப்படியாக, செவ்வாய் கேது இணைவு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கிறது என்று பார்ப்போம்.
எவர் ஒருவர் வாழ்க்கையில் தொடர்ந்து தடங்கல் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்களோ அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அதில் செவ்வாய் கேது இணையப்பெற்று இருப்பதை பார்க்கலாம். இவ்வாறான அமைப்புகள் கொண்ட ஜாதகருக்கு நிலம் மற்றும் வீடு வாங்கும் பொழுது அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
அதோடு மாங்கல்யக்காரகன் என்று கூறப்படும் செவ்வாய் பகவான் கேதுவுடன் சேரும்பொழுது திருமணத்தில் தடை தாமதம் உண்டு செய்யும். அல்லது திருமணம் முடியும் நேரம் சில தடைகளை கொடுத்து நிறுத்தி விடும். மேலும், பெண் ஜாதகத்தில் செவ்வாய் என்பது கணவனை குறிக்கும் கிரகம் ஆகும்.
அந்த வகையில் செவ்வாய் உடன் கேது இணைந்து இருந்தால் அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி தன் கணவனுடன் கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்பட்டு கொண்டே இருக்கும். மிக முக்கியமாக செவ்வாய் கேது இணைவு கொண்ட பெண்கள் தங்களுக்கு என்று தனி வழி வகுத்து அதில் வாழும் பழக்கம் வைத்திருப்பார்கள்.
யாருக்கும் வலைந்து கொடுக்காத தன்மையை இந்த செவ்வாய் கேது இணைவு உருவாக்குகிறது. இவ்வாறான குணங்களே இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்களை கொடுத்து விடுகிறது. இன்னும் சிலருக்கு இந்த அமைப்புகள் விவாகரத்து வரை எடுத்து கொண்டு சென்று விடும்.
இந்த இணைவு கொண்ட ஜாதகர் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு மிகவும் அடிமை ஆகியிருப்பார். அதோடு செவ்வாய் என்பது சகோதர உறவுகளையும் குறிக்கக்கூடியது. அந்த செவ்வாய்மூன்றாவது ஸ்தானத்தில் இருந்தால் அண்ணன் தங்கை உறவு நிரந்திரமாக பிரிக்கப்படும்.
மேலும், இந்த செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி செய்து தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுபத்துவம் பெற்று கேதுவுடன் தொடர்புகொண்டு இருந்தால் வக்கீல் துறை, போலீஸ் மற்றும் ராணுவ துறை, மருத்துவ துறையில் திறமை மிக்கவராகவும் செயல்படுவார்.
இந்த சேர்க்கை என்பது ஐந்தாம் பாவத்தோடு சம்பந்த பெரும்பொழுது குழந்தை பிறப்பதில் தடை தாமதம் உண்டாகும். சிலருக்கு பலமுறை சிகிச்சை பெற்ற பிறகே குழந்தை பிறக்கும் யோகம் கிடைக்கும்.
ஆக செவ்வாய் கேது அமைப்பு இருந்தால் தங்களுக்கு ஏற்படும் முன்கோபங்களை தவிர்த்து வாழும் பொழுது அவர்களுக்கு திருமண வாழ்க்கை இனிமையாகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |