மறந்தும் வீட்டில் இந்த பொருட்களை காலியாக வைக்க கூடாது
நாம் எல்லோரும் வீடு கட்டும் பொழுது வாஸ்துபடி கட்ட வேண்டும் என்று தான் ஆசை படுவோம்.ஆனால் எல்லோருக்கும் அது சத்தியம் ஆகுவது இல்லை.அப்படியாக வாஸ்து படி வீட்டை கட்டாவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அதனால் தான் வாஸ்து மிகவும் முக்கியமானது என்று சொல்லப்படுகிறது.மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு வீட்டை கட்டும்போது அல்லது ஏதேனும் ஒரு பொருளை வைக்கும்போது, திசைகளின்படி முடிவு செய்கிறோம்.
இது நமக்கு நன்மை தரும் என்று நம்புகிறோம். ஒரு வீட்டில் வாஸ்து சரியாக இருக்கிறது என்றால் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுகிறது. ஒருவர் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெறுக அவர்கள் வீட்டில் வாஸ்து படி எல்லாம் சரியாக பார்த்து கொள்ள வேண்டும்.
அதாவது நாம் வசிக்கும் இடத்தில் உள்ள பொருட்களின் அமைப்பு எல்லாம் வாஸ்து படி வைக்க நம் வீட்டிற்கு நிறைய உதவுகிறது. நம் வீட்டில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நம் வாழ்க்கையையுடன் சம்பந்த பட்டு இருக்கிறது.
அதாவது வீட்டில் நேர்மறை ஆற்றல் தாண்டி எதிர்மறை ஆற்றல் நிரம்பி இருக்க வீட்டின் சூழ்நிலையும் வீட்டில் உள்ளவர்களின் மன ஓட்டத்தையும் பாதிக்கும்.அப்படியாக வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் வராமல் பார்த்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
வீட்டில் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் பாத்திரம் , மதிப்பு மிக்க பொருட்களை வைத்திருக்கும் இடம் இவை எல்லாம் எப்போதும் காலியாக வைத்திருக்கக் கூடாது.
அப்படி வைத்திருந்தால் எதிர்மறையான தாக்கம் உருவாகும் என்று வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது.
வீட்டில் உள்ள மற்ற பாத்திரங்களைப் போலவே, தண்ணீர் பாத்திரங்களும் மிகவும் முக்கியமானவை.அதில் எப்பொழுதும் தண்ணீர் நிரப்பி வைக்க மஹாலக்ஷ்மி அருள் நமக்கு கிடைக்கும்.
அடுத்ததாக அரிசி பாத்திரத்தை ஒரு போதும் காலியாக வைக்கக்கூடாது. இது வறுமைக்கு வழிவகுக்கும். குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இரவில் அரிசி பானையை காலியாக வைக்கக்கூடாது என சாஸ்திரம் சொல்லப்படுகிறது.
அதே போல் குளியலறை வாலியை காலியாக வைக்கக்கூடாது. இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையச் வாய்ப்பு இருப்பதாக சொல்லபப்டுகிறது.
மணி பர்ஸ் அல்லது வாலட் எப்போதும் காலியாக இருக்கக்கூடாது நிதியுடன் வாலட் தொடர்புடையது என்பதால், மறந்தும் கூட காலியாக வைத்து கூடத்தி.
செல்வம் மற்றும் நிதி வளர்ச்சியை மேம்படுத்த, எப்போதும் பணப்பையில் சிறிது பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |