ஓம் நமசிவாய என்று ஒரு மணி நேரம் சொல்ல நடக்கும் அதிசயங்கள்

By Sakthi Raj Apr 06, 2024 07:06 AM GMT
Report

சிவ பக்தர்கள் அனைவருமே ஒரு மணி நேரத்தில் எத்தனை முறை அவர்கள் ஓம் நமசிவாய என்று சொல்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

மேலும் சிவ பெருமானை நினையாத நொடி பொழுது ஒன்று அவர்கள் வாழ்வில் இருப்பதும் இல்லை.

ஓம் நமசிவாய என்று ஒரு மணி நேரம் சொல்ல நடக்கும் அதிசயங்கள் | Sivan Manthiram Pavapunniyam

இங்கு எல்லோரும் இறைவனை எப்பொழுதும் நினைத்து கொண்டு இருக்க வேண்டும் என்பது விதி இல்லை.

இருப்பினும் இறைவனை மனதில் வைப்பதும் ஆன்மீகத்தில் ஈடுபடுவதும் அவரவர் விருப்பமே.

ஆயினும் ஒருவர் தன் வாழ்வில் ஒரு மணி நேரம் இறைவன் நாமம் சொன்னால் நடக்கும் அதிசயங்கள் மற்றும் என்ன பலன்கள் கிடைக்கிறது என்று பார்ப்போம்,

ஓம் நமசிவாய என்று ஒரு மணி நேரம் சொல்ல நடக்கும் அதிசயங்கள் | Sivan Manthiram Pavapunniyam

ஒருவர் ஓம் நமசிவாய நாமம் சொல்ல,

ஒரு மணி நேரம் மௌன விரதம் இருந்ததற்கான பலன் கிடைக்கிறது.

ஒரு மணி நேரம் பூஜை செய்ததற்கான பலன் கிடைக்கிறது.

ஒரு மணி நேரம் உங்கள் பாவத்தை போக்கிக் கொண்ட பலன் கிடைக்கிறது.

ஒரு மணி நேரம் இறைவனை நோக்கி சில படிகள் முன்னேறுகிறார்கள்.

ஒரு மணி நேரம் தியானம் செய்த பலன் கிடைக்கின்றது.

ஒரு மணி நேரம் சமாதியில் உள்ளவர் போல் ஒரு அமைதி நிலைக்கு ஆள் ஆகிறார்கள்.

ஒரு மணி நேரம் ஒழுக்கமான மாணவனாக ஆகிவிடுகிறீர்கள்

நேர்மறையான எண்ணங்கள் உங்களுக்குள் வந்துவிடும்.

ஒரு மணி நேரம் உங்கள் போலித்தனமான வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைகிறார்கள். 

ஒரு மணி நேரம் நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள்.

ஒரு மணி நேரம் மகான்கள் வாயில் வந்த நாமத்தை நாமம் சொல்வதால் அவர்களுடைய பிரசாதத்தை உண்டவர்கள் ஆகின்றோம், கோடி புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றோம்.

இப்படி ஒரு மணி நேரம் இறைவனின் நாமம் சொன்னதுக்கே இத்தனை கோடி பலன் கிடைக்கும் பொழுது, போலி வாழ்க்கையில் இருந்து விலகி இறைவனை வழிபட நம் வாழ்வில் எத்தனை பெரிய நன்மைகள் அடைய முடியும் என்று இதில் இருந்து உணரமுடிகிறது.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US