தன் பக்தைக்கு பிரசவம் பார்த்த சிவபெருமான்

By Sakthi Raj Apr 14, 2024 01:08 AM GMT
Report

ஈசன் அவர் பக்தர்களை காப்பற்ற பல அவதாரம் எடுத்துள்ளார். அப்படி திருச்சியில் வாழ்ந்து வந்த வணிகன் அவர் சிவபெருமானின் மிகுந்த பக்தர்.

அவரின் மனைவிக்கு பிரசவ வழி ஏற்பட அவரின் தாய் வர தாமதமானதால் அப்பெண்மணி வலியில் துடிப்பதை பார்த்து இதயம் பொறுக்காமல் சிவபெருமானே அவர் தாய் போல் உருவம் கொண்டு பிரசவம் பார்த்தார்.

தன் பக்தைக்கு பிரசவம் பார்த்த சிவபெருமான் | Sivan Trichy Thaymanaswamy Koyil

பெண்ணிற்கு பிரசவம் பார்த்த ஈசன் அங்கு தாயுமானவர் ஆனார். ஆகவே திருச்சி சிவபெருமான தாயுமானவர் மீது சம்பந்தர் பாடிய பதிகம் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.

தன் பக்தைக்கு பிரசவம் பார்த்த சிவபெருமான் | Sivan Trichy Thaymanaswamy Koyil

இப்பாடலின் பொருள், நல்லவற்றை தன்னுடையதாக கொண்டவனை, தீயவை ஏதும் இல்லாதவனை, மிக வெண்மையான இடத்தை வாகனமாகக் கொண்டவனை,

உமை அம்மையை ஒரு பாகமாய் கொண்டவனை,யாராலும் எளிதில் தர முடியாத வீடுபேரு என்னும் செல்வத்தை உடையவனை,

திருச்சிராப்பள்ளி மலையை கொண்டவனை போன்ற தனது உள்ளம் குளிர்ந்து போகிறது என்ற சம்பந்தர் பெருமாள் பாடுகிறார்.

இந்த பதிகம் பாட சுகப்பிரசவம் நடந்து ஈசன் உடன் இருந்து காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.

கர்ம வினைகள் நீங்க என்ன செய்வது?

கர்ம வினைகள் நீங்க என்ன செய்வது?


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US