தரித்திரம் விலக பௌர்ணமியில் இதை செய்யுங்கள்
பௌர்ணமி திதி வழிபாடு என்றாலே நம்முடைய நினைவுக்கு வர வேண்டியது அம்மன் வழிபாடு தான்.
வாராஹி, காளி, பிரத்தியங்கிரா தேவி, அங்காளம்மன் போன்ற தெய்வங்களை பௌர்ணமி நாளில் வழிபாடு செய்வது மிகச்சிறப்பானது.
அந்தவகையில், 19 ஆம் திகதி நாளை ஆவணி மாதத்தின் பௌர்ணமி திதி வரவிருக்கின்றது.
இந்நாளில் உடலில் இருக்கும் தரித்திரத்தை விரட்டி அடிக்க குளிக்கும்போது செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பார்க்கலாம்.
செய்யவேண்டிய பரிகாரம்
நாளை சூரிய உதயத்திற்கு முன்பு குளிக்கவேண்டும்.
குளிக்கின்ற தண்ணீரில் 2 சிட்டிகை மஞ்சள் பொடி, 1 கைப்பிடி கல் உப்பு போட்டு கலக்கவும்.
பின் அந்த தண்ணீரில் வலது கை ஆள்காட்டி விரலால் ஓம் என்ற வார்த்தையை எழுதி பிறகு அந்த தண்ணீரை கொண்டு குளிக்கவும்.
இவ்வாறு குளிப்பதனால் உங்கள் உடம்பை பிடித்த தரித்திரம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |