பணம் நிரம்பி வழிய பர்சில் இந்த பொருட்களை வையுங்கள்

By Yashini May 21, 2024 08:25 AM GMT
Report

வாஸ்து சாஸ்திரப்படி, நாம் வைத்திருக்கக் கூடிய பர்ஸ் என்பது பணத்தையும், அதிர்ஷ்டத்தையும் நம்மை நோக்கி ஈர்க்கக் கூடிய மிக முக்கியமான பொருளாகும்.

இதில் குப்பை போல் தேவையற்ற பல பொருட்கள் அடைத்து வைப்பதால், நமக்கு பணம் வரும் வழிகளும் தடுக்கப்பட்டு விடும்.

ஆனால் குறிப்பிட்ட பொருட்களை பர்சில் இருக்கும் படி வைத்தால் பணமும், அதிர்ஷ்டமும் நிரம்பி வழியும். 

பணம் நிரம்பி வழிய பர்சில் இந்த பொருட்களை வையுங்கள் | These Things In Your Purse For Attracting Money

பர்சில் வைக்கக்கூடிய பொருட்கள்

அரச இலை: அரச மரத்தின் இலையில் மும்மூர்த்திகளும், தேவர்களும் குடியிருப்பதால் செல்வமும், வெற்றியும் வந்து கொண்டே இருக்கும்.

தாமரை வேர்: தாமரை மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் என்பதால் செல்வ வளர்ச்சியையும், பல விதமான நன்மைகளையும் தந்து கொண்டே இருக்கும்.

கோமதி சக்கரம்: கோமதி சக்கரம் வைத்திருந்தால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வ வளம் ஆகியன குடும்பத்தில் குறைவில்லாமல் நிலைத்திருக்கும்.   

பணம் நிரம்பி வழிய பர்சில் இந்த பொருட்களை வையுங்கள் | These Things In Your Purse For Attracting Money

ஸ்ரீ யந்திரம்: யந்திரம் குடும்பத்தில் வெற்றி, மகிழ்ச்சி, நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்க துணை செய்யும்.

வெள்ளி காசு: பர்சில் வெள்ளி காசு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமின்றி, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு செல்வ வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும்.

அரிசி: பர்சில் சிறிது அரிசி போட்டு வைப்பதால் வீட்டில் உணவு பற்றாக்குறை என்பது எப்போதும் ஏற்படாது. வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் ஆகியவை நிறைந்திருக்க செய்யும். 

மகாலட்சுமியின் படம்: பர்சில் மகாலட்சுமி படம் வைத்திருந்தால் ஆரோக்கியம், செல்வம் ஆகியவற்றை தரும். பணம் வந்து கொண்டே இருக்கும்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US