எந்த ராசிக்காரர்கள் திருமண பந்தத்தில் இணைவது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக திருமணம் செய்யும் போது ராசி, நட்சத்திரம் இவற்றினை கட்டாயம் பார்ப்பார்கள். இவை சரியாக இருந்தால் தான் பலரும் திருமண காரியத்தை மேற்கொண்டு பேசுவார்கள்.
திருமணத்திற்கு பின்பு வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும். மகிழ்ச்சி வற்றாமலும், பண தட்டுப்பாடு இல்லாமலும் இருக்க வேண்டும்.
ஆனால் சில ராசியினர் சேரும் போது விளைவுகள் நேர்மறையாக இருப்பதில்லை. வாழ்க்கையே நரகம் போல தோன்றும். இவர்கள் என்ன முயற்சி செய்தாலும், அவர்களை புரட்டி போடும் அளவிற்கு பிரச்சனை ஏற்படுமாம்.
தனிப்பட்ட முறையில் நல்லவராக இருந்தாலும், இந்த ராசிக்காரருடன் இணைந்தால் ஏன் மோசமானவராக மாறுகிறார்கள்? இந்தப் பதிவில் அது பற்றி விரிவாக காணலாம்.
மீனம், தனுசு
மீனம் மற்றும் தனுசு ராசியினர் எதிரும், புதிருமாக இருப்பார்கள். அதாவது நீரும், நெருப்பும் எப்படி ஒன்றாக இருக்க முடியாதோ அதே போன்று மீனமும் தனுஷும் இருப்பார்கள்.
எதிலும் துடிப்பாக செயல்படக்கூடிய இவர்கள், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய மென்மையான குணம் கொண்டவராகவும், இரக்க குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
தனுசு ராசியினர் துடுக்காக பேசுவதால் மீன ராசியினர் அடிக்கடி காயப்பட வாய்ப்புள்ளது. மேலும் போதுமான புரிதல் இல்லாததால், வாழ்க்கை மோசமாக மாறிவிடுமாம்.
மேஷம், கடகம்
மேஷம் மற்றும் கடகம் இந்த இரண்டு ராசியும் பொருந்தாத ராசியாம். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்பதால் துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதுடன், வெளிப்படையாகவும் பேசுவார்கள்.
கடக ராசியினரின் அதிபதி சந்திரன் என்பதால், அதிகம் உணர்ச்சிவசப்படுபவராகவும், குடும்ப பாசம் அதிகம் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்களுக்கு அடிக்கடி சண்டை ஏற்படும், புரிதல் இருந்தால் வாழ்க்கையே நரகம் ஆகிவிடுமாம்.
மிதுனம், விருச்சிகம்
மிதுனம் மற்றும் விருச்சிக ராசியினர் எதையும் தீவிரமாக சிந்திக்கவும், ஆழமான உணர்ச்சியினையும் கொண்டுள்ளவர்கள். தங்கள் துணை மீது அதிக அக்கறை கொண்டவராக இருப்பார்கள்.
எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள். இரட்டை ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். குறும்பும், தனித்துவமும் கொண்ட மிதுன ராசிக்காரர்கள் தனித்துவமாக முன்னேற நினைப்பார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்வது பல பிரச்சனையை ஏற்படுத்துமாம், நீடிய பொறுமை மற்றும் புரிதல் இருந்தால் மட்டுமே ஒன்றாக வாழ முடியுமாம்.
மகரம், சிம்மம்
மகர ராசியினர் ஒழுக்கம் கடின உழைப்பு, நிதானம் இவற்றினை கொண்டவராக இருப்பார்கள். ஆனால் சிம்ம ராசியினர் தற்பெருமை கொண்டவராக இருப்பதுடன், அனைவருடனும் நட்பு கொள்வதுடன், கவனம் ஈர்க்கவும் நினைப்பார்கள். இந்த இரண்டு ராசியினரும் திருமணம் செய்யும் போது முரண்பாடுகள் ஏற்படக்கூடுமாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |