மாலை 6 மணிக்கு மேல் கட்டாயம் நம் வீடுகளில் செய்யக்கூடாத விஷயங்கள்

By Sakthi Raj Jun 14, 2025 01:00 PM GMT
Report

 இந்து மத சாஸ்திரத்தில் குறிப்பிட்ட சில நேரங்களில் சில விஷயங்களை செய்து விட வேண்டும் என்றும், ஒரு சில நேரங்களுக்கு மேல் சில விஷயங்களை செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படியாக, நம் வீடுகளில் மாலை 6 மணிக்கு மேல் கட்டாயம் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

ராசி பலன்(15-06-2025)

ராசி பலன்(15-06-2025)

1) வீடுகளில் பூசணிக்காய் வைத்து திருஷ்டி சுற்றி போடவேண்டும் என்றால் கட்டாயம் மாலை 6 மணிக்கு முன்பாக திருஷ்டி சுற்றி போட்டு விடவேண்டும். அதிலும் குறிப்பாக மாலை 6 மணிக்கு மேல் திருஷ்டி கழிக்க நேரிட்டால் அதை பெண்கள் செய்யக்கூடாது.

2) வீடுகளில்  பூஜைக்கு ஏற்றிய விளக்கை கட்டாயம் ஆண்கள் அதை அணைக்கக்கூடாது.

3) வீடுகளில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தோளில் துண்டு அணிந்து கொண்டு ஜபம் செய்தல், உணவு எடுத்துக்கொள்ளுதல், பூஜை செய்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடக்கூடாது.

4) நாம் தீபாவளி தவிர்த்து பிற நாட்களில் காலை நேரத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.

5) குடும்பத்தில் உடன் பிறந்த சகோதிரிகளை ஆண்கள் ஒருபொழுதும் அவமானம் செய்யக்கூடாது. அது வீட்டில் சில சிக்கலை உண்டு செய்யும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US