தான தர்மம் செய்யும் பொழுது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன?
இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் தான தர்மம் செய்கின்ற பொழுது அவர்களுடைய கர்ம வினைகள் யாவும் விலகுகிறது. மேலும், தான தர்மம் செய்கின்ற பொழுது நம்முடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்களும் குறைகிறது.
இருப்பினும் ஒருவருக்கு தானம் செய்கின்ற பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம். எப்பொழுதும் அவர்களுடைய பிறந்த தினத்தில் தான தர்மம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், கிரகங்களுடைய தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குரிய கிரகத்திற்கு ஏற்ற பொருட்களை தகுந்த நாட்களில் தானம் செய்வதால் மட்டுமே அதற்குரிய முழு பலன்களை பெறலாம். அந்த வகையில், ஒருவர் திங்கட்கிழமை தானம் செய்தால் அவர்களுக்கு மன அமைதி கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்குரிய தினம் என்பதால் அந்த நாளில் நாம் தானம் செய்வதால் முருகப்பெருமானுடைய முழு அருளையும் பெறலாம். அதோடு, எந்த தினங்களில் என்ன பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த காணொளி பார்த்து தெரிந்து கொள்வோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |